Headlines

ஜேர்­ம­னில் நடந்த தேர்­தலில் ஏஞ்­சலா மேர்­கலின் கட்சிக்கு வர­லாற்று தோல்வி

ஜேர்­ம­னியின் பெர்­லின் நடை­பெற்ற தேர்­தலில் ஜேர்­ம­னிய சான்சலர் ஏஞ்­சலா மேர்­கலின் கிறிஸ்­தவ ஜன­நா­யக கூட்­டணி வர­லாற்று  தோல்­வி­யடைந்­துள்­ளது. ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்­சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, 17.6 சத­வீத ஆத­ர­வையே பெர்லின் தேர்­தலில் பெற்­றுள்­ளது. இத­னி­டையே வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எவ்.டி 14 ச­த­வீ­த மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது. இதனால், பெர்லின் உட்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை…

Read More

சிறைக்கூண்டுகளுக்கு சி.சி.டி.வி கமெரா

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்படவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு, நேற்றுத் திங்கட்கிழமை (19) அறிவித்துள்ளது. இவ்வாறு அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதன் மூலம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நடவடிக்கை குறித்து பொலிஸாரால் அவதானமாக இருக்க முடியும் என்று குறித்த அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறைக்கூண்டுக்குள்ளேயே பொருத்தப்படல்…

Read More

தேரர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரர் மீதான வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ஒத்திவைத்துள்ளார். குறித்த உத்தரவு இன்று (20) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை இளநீருக்கு ஐரோப்பிய நாடுகளில் கிராக்கி

வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக…

Read More

ராம்குமார் தற்கொலை காட்சி கமெராவில் பதிவாகவில்லை: இது திட்டமிட்ட செயலா?

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அறையில் கண்காணிப்பு கமெரா உள்ளது. ஆனால், அது பழுதாகி இருப் பதால் தற்கொலை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்தக் கமெரா எப்படி பழுதானது? திட்டமிட்டே அது பழுதாக்கப்பட்டதா என்பன போன்ற பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் சிறைகளில்…

Read More

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியானது – இங்கே பாருங்கள்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளின் முடிவுகளைhttp://www.ugc.ac.lk/ என்ற  இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக  இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட 10…

Read More

பல்கலைக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படுவர்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். இது கடந்த முறையை விட 10 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்

-சுஐப் எம் காசிம்  வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து தமது தாயகத்தில் மீளக்குடியேறி வாழத்தலைப்படும் போது இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் அதனைக்குழப்பி மீண்டும் துளிர் விடுகின்ற தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதே அவர்களின் உள்நோக்கமாகும் என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார் மன்னார் உப்புக்குளத்தில் அல்பதாஹ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் றிஸாட் …

Read More

கல்ஹின்னை சம்பவம் இனவாதமல்ல!

-விடிவெள்ளி  ARA.Fareel- கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­பவம் இன­வாத செய­லல்ல. மது போதையில் இருந்­த­வ­ரா­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கி­றார்கள் என அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லையின் இஹ­ல­முல்ல சுகுன குண­வன்ச தேரர் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்­சரிடம் தெரி­வித்தார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஹலீம் “கல்­ஹின்னை சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து சிலர் இன­வா­தத்­தைத்­தூண்ட முயற்­சிக்­கி­றார்கள். இந்த முயற்­சிக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது….

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்; மறைந்திருந்த ஒருவரை திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச்சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த…

Read More

வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும். இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273 பேர்பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர். முதல்…

Read More

கால அவகாசம் தேவை – அமைச்சர் செனவிரத்ன

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என அமைச்சர் W.D.J.செனவிரத்ன தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுடன் அமைச்சர் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தன்னால் இயன்றதை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், எனினும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் மிகவும் நிதானமாக குறித்த விடயங்களுக்கு தீர்வைப் பெற வேண்டும்’ எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அதன் அறிக்கையினை அமைச்சரவையில் சமர்பிப்பதற்கு கால அவகாசம்…

Read More