முஸ்லிம் இன படுகொலை: விசேட நீதிமன்ற விசாரணை தேவை – தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் கோரிக்கை
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன படுகொலைகளை விசாரிக்க விஷேட நீதிமன்றமொன்றினை அமைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள்விடுத்துள்ளது. 26 ஆவது தேசிய ஷுஹதாக்கள் தினத்தையொட்டி நேற்று புதன்கிழமை தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கு மாகாணாத்திலுள்ள பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்…
