Headlines

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் மஹிந்தாநந்த அளுத்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தீர்மானித்துள்ளார். குறித்த பதவி விலகல் கடிதத்தை மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும், இதுவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகாத 12 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு எனக்கு தொலைபேசி அழைப்­பு வருது

கிழக்கில் வலு­வான முஸ்லிம் சக்தி உரு­வெ­டுத்து வரு­வ­தாக தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு தினமும் தொலைபேசி அழைப்­புகள் வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் சிறு வியா­பா­ரி­களின் வர்த்­தக நிலை­யங்­களை அகற்றும் திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பொர­ளையில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் பாரா­ளு­மன்ற…

Read More

இலத்திரனியல் கருவியின் மூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பை, இலத்திரனியல் கருவியின் மூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பிக்கும் போது, இந்த ஏற்பாட்டை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்துக்குள் வாக்குப்பதிவுக்கு இலத்திரனியல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்திருப்பினும், இதுவரையில் அது நிறைவேறாதுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

மலேஷியா செல்கிறார் மஹிந்த

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகி, 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ…

Read More

பேராதனை மோதல் சம்பவம் மூன்று குழுக்கள் விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மோதல் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேராதனை பல்கலைக்fழக இணைந்த சுகாதார கல்விப் பீட சிரேஷ்ட மாணவர்கள் சிலருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்குமிடையே  இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 12 க்கும் மேற்பட்ட மொழிபேசும் மாணவர்கள் காயமடைந்த போதும் 5 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்….

Read More

விபத்தில் 20 பேர் படுகாயம்

குருநாகலிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும், குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் துல்ஹிரியவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இன்று  காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தோர், வறகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

350 பேருக்கு சமாதான நீதவான் பதவிகள்

நாட்டில் சமுக சேவையில் ஆர்வம் காட்டி வரும் 350 பேருக்கு சமாதான நீதவான் பதவகள்வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான  உத்தியோகபூர்வ வைபவம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இம்மாதம் 31ம் திகதி புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.  சமாதான நீதவான் பதவி மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்படும் கௌரவ பதவியாகும்.

Read More

மஹிந்த வடக்கு மக்களை காட்சிப்பொருளாக்கினார்

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். கட்டிடங்கள் அமைக்கப்பட்டன, வீதிகள் புனரமைக்கப்பட்டன, ஆனால் வடபகுதி தமிழ் மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில்  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர்  அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார். வடக்கு மக்களின்…

Read More

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாஜூடீன் கொலை! தொலைபேசி அழைப்பு விபரங்கள் முழுவதும் அழிப்பு

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையின் மேலதிக செயலாளர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களில் இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தொலைபேசி அழைப்பு விபரங்களை அழித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது….

Read More

வருகிறது ஊடக மத்திய நிலையம்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும்….

Read More