Headlines

போராட்டம் கைவிடப்படாது – ஞானசார தேரர்

வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை.எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் (25) பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும்,…

Read More

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்… பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத் கோரிக்கை… காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார். இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, காணாமல் போனோர் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள…

Read More

லசந்த கொலை: நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர் நீதிமன்றில் சாட்சியமளிக்கக்கூடிய மனோ நிலையில் இருக்கின்றாரா என பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இதேவேளை இந்த கொலை தொடர்பிலான சந்தேக நபர்களின்…

Read More

மன்னாரில் நீர் விநியோகம் துண்டிப்பு

மன்னாரில் பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால்இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால்முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்குஅமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில்பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00மணிவரை நீர் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More

நிதி அமைச்சர் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள எட்டாவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  நிதி அமைச்சர் ரவி   கருணாநாயக்க இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய விடயங்களும், பொருளாதார  பிராந்திய முதலீடுகள் பற்றிய விடயங்களும் முதன்மை பெறுகின்றன. பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் இந்த மாநாட்டில் அமைச்சரின் செயலாளர் டாக்டர் சமரதுங்கவும் வேறுசில அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளார்கள்.

Read More

மருந்துப் பொருள் விலை ஒழுங்குறுத்தும் முறை குறித்து அரசாங்கம் கவனம்

மருந்து விலையை ஒழுங்குறுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நியாய விலையில் மருந்துகளைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நேற்று (24) நுகர்வோர் அதிகாரசபையில் நடைபெற்றது.. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி அசித டி சில்வா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read More

சமுர்த்தி திட்டம் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படவுள்ளது

சமுர்த்தி திட்டம் மிகவும் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (23); ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்;பிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒழுங்கில்லாத நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்ததால் அது திருப்தியளிக்காத அமைப்பாக மாறியுள்ளது. இதனை நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சமுர்த்தி…

Read More

வர்ணக் குறியீடு இல்லாத 11,125 பான வகைகள் மீட்பு

உணவுப் பாதுகாப்பு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இதுவரை வர்ணக் குறியீடு இல்லாத 11,125 பான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி நேற்று மாத்திரம் 5116 வர்ணக் குறியீடுகள் இல்லாத பான வகைகள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை வர்ணக் குறியீடு அற்ற பானங்களை அந்தந்த நிறுவனத்திடமே மீளளித்து விட்டு, குறியீடுடன் கூடிய பானங்களை மட்டும் விற்பனை செய்யுமாறு, வர்த்தகர்களுக்கு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர். நேற்று நாடுபூராகவுமுள்ள வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள்,…

Read More

நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை

நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல் கடந்த காலங்களில் நிலவியதாக தபால் அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்தார். சிரேஷ்ட உத்தியோகத்தர்களை கடமையில் இணைத்து கொள்வதற்கான பரீட்சை அண்மையில் நடைப்பெற்றதுடன் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த 150 பேர் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, 750 தபால் ஊழியர்களை கடமையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் 350 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரோஹண அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Read More

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40 இற்கு உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிலாவத்துறை, முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை (25/08/2016) பாராளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இடம்பெற்றபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி,…

Read More