Headlines

“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”




“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை.

இந்த பாதயாத்திரையின் நோக்கம்  மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர்.

ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.

“ஜனாதிபதி, பிரதமர் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும்போது, ஆட்சியிழந்த குடும்பமொன்று மீண்டும் பலத்துக்கு வருவதற்கு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *