Headlines

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இதற்கு பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஏராளமான சத்துக்கள் தான் காரணம். மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. இப்போது பேச்சரிம் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் அதிகளவு நன்மைகள் கிடைக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்….

Read More

ஜனாதிபதி இன்று மட்டக்களப்பில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது விளையாட்டுத் துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நகர…

Read More

இத்தாலி, சீனப்பிரஜைகள் மீது குளவித்தாக்குதல்

சீகிரியாவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது குளவி கொட்டியதில், பாதிக்கப்பட்டவர்கள் கிஓஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், சீனப்பிரஜைகள் 7பேர், இத்தாலிப்பிரஜைகள் இருவர் மற்றும் பிபிலையைச்சேர்ந்த 16பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுச் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆட்பதிவுத்திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பொதுநிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு நகரசபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஒன்றினைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முப்படையினர், கொழும்பு நகரசபை, அரச நிறுவனங்கள் என்பன சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன….

Read More

மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை இங்கிலாந்து நிராகரித்தது

ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துவிட்டது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு…

Read More

இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று  முன்தினம் (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும்…

Read More

ரஷ்யா – துருக்கி சர்ச்சை முடிவிற்கு வந்தது

கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர்…

Read More

ஜாகீர் நாயக்கின் டிவி ஒளிபரப்பை முடக்க ஆலோசனை!

ஜாகீர் நாயக்கின் பேச்சு மற்றும் அவரது பணப்பரிவர்த்தனையை ஆராய முடிவு செய்துள்ளது. அவரது டிவி ஒளிபரப்பை முடக்கவும் ஆலோசனை நடந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த 2 தாக்குதல்களில் 25 பேர் பலியானார்கள். இதையடுத்து ஜாகீர் நாயக் பேச்சு மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆராய மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் முடிவு செய்தன. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டுபிடிக்க மகாராஷ்டிரா அரசு 9 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

வெளிநாட்டு நீதிமன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும்  நீதித்துறையிலும் தலையிட இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த யுத்த காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதற்கும் அல்லது வெளிநாட்டு யுத்த நீதிமன்றங்களை எந்தவொரு இடத்திலும் எந்த வகையிலும் அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்வரை அதற்கு ஒருபோதும்…

Read More

ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு…

Read More

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டது. இங்கு தினமும் 3…

Read More