Headlines

கணக்கியல் சார்துறையின் பங்களிப்பு அபரிமிதமானது

-சுஐப் எம்.காசிம் – உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கு முகாமைத்துவ கணக்கியல்சார்துறை பெரும் பங்களித்து இருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமாலை தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கணக்காய்வு மாநாடும், ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியலில் சிறப்புத் தேர்ச்சி  பெற்றவர்களுக்கான விருது வழங்கலும் கொழும்பு, சினமன் லேக்சைட்  ஹோட்டலில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விருதுகளையும் வழங்கிவைத்தார்….

Read More

தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…

Read More

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வருடம் முதல் புதிய வடிவில்!

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையதும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார். நேற்று (11) முற்பகல் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது…

Read More

மட்டு விமான ஓடுபாதையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்!

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி, பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும்.  இதன் போது ஜனாதிபதிக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையின் நினைவுப் பதாகை ஜனாதிபதியின் கரங்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. புதிய…

Read More

நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு!

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பங்களாதேஷ்க்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், அவ் விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.   இலங்கைக்கான இவரது விஜயத்தின் போது இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இவருடன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மன் பிரீட் சிங் ஆனந்தும் வருகை தரவுள்ளார்.  பங்களாதேஷுக்கான இவரது விஜயத்தில், பங்களாதேஷ் அரசுக்கான அமெரிக்காவின் ஆதரவு, வன்முறைக்கு…

Read More

பஸ் டிப்போ ஊழியர்கள் சம்பள நிலுவை வழங்கக்கோரி போராட்டம்!

இரத்தினபுரி பஸ் டிப்போ ஊழியர்கள் இரு மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி 440 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

வற் வரிக்கு இடைக்கால தடை

பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

டொம் மாலினோவஸ்கி விரைவில் இலங்கை வருகை

ஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர்  டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இலங்கையின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு சிவில் சுமூகத்தினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளின் போது நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் அதேவேளை இந்த செயற்பாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நாமல் கைது!

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

‘சிறையில் நான் இங்குதான் இருந்தேனா’ (Video)

1971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில்  தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலை கூண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (10) பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோ…

Read More

சில எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை டிசம்பர் 14 இல்

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும் டிசம்பர்  மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவினை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்  பிறப்பித்துள்ளார்.  எந்தவொரு சரியான ஆதாரங்களும் இன்றி தான் கைதுசெய்யப்பட்டமை தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்தும், அதற்கான நஷ்டஈட்டினை வழங்கக்கோரியும் அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றத்தில் கம்மன்பில தாக்கல்…

Read More