பரிசுப் பொருட்களில் மயங்காத சுலைமான் (அலை)
அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது. உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள். அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து…
