Headlines

பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் (14) முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம்-9 மற்றும், தரம்-8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார்…

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More

இலங்கை வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டுகிறது – பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் Jean Marin Schuh. இதனை தெரிவித்துள்ளார் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம்,: மனித உரிமை தொடர்பான விடயங்களில் கவனம்செலுத்தி வருகிறது. இந்தநிலையில் அந்தநாட்டுடன் உறவுகளை விருத்தி செய்து கொள்ள விரும்புவதாக பிரான்ஸ்தூதுவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் செயலிலும் காட்டுகிறது. இதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமையும் ஒன்று உதாரணம் என்றும்…

Read More

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிஷாத்

மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும்  பணிபுரிந்தவர். அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும்…

Read More

அலவி மௌலானா காலமானார்

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

FCID புதுப் பெயருடன் புதுப் பரிணாமத்துடன்

கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட FCID ஒருபோதும் முடப்படாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும், FCID மூடப்பட மாட்டாது, ஆனால் புதுப்பெயருடன் புது விடயங்களை உள்ளடக்கியவாறு மீண்டும் ஆரம்பிக்கப்படும், எனினும் இதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ராஜித…

Read More

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை மீட்பு: காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (14.6.2016) மாலை காணாமல் போன இரண்டரை வயதுயை குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள கர்பலா கிராமத்தில் வைத்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஜன்னத் மாவத்தையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான எம்.ஜே.ஜியாஸ் எனும் ஆண் குழந்தையொன்று (14.6.2016 செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளது. வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த இந்தக் குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றாரும், உறவினர்களும், அயலவர்களும் குழந்தையை தேடியுள்ளனர்….

Read More

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் திருப்­ப­தியைச் சேர்ந்­தவர் கரு­ணா­கரன் (45). இவ­ரது மனைவி மோகனா (38). இவர்கள் தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ருடன் காஞ்­சி­புரம் வந்­துள்­ளனர். இவர்கள் அண்­மையில் காஞ்­சி­பு­ரத்­தி­லி­ருந்து பெங்­களூர் செல்­வ­தற்கு முச்­சக்­க­ர­வண்­டியில் அரக்­கோணம் ரயில் நிலையம் சென்­றுள்­ளனர். வழியில் மஞ்­சம்­பாடி ரயில்வே கேட் அருகே முச்­சக்­க­ர­வண்டி செல்­லும்­போது மோக­னாவின் தலை­முடி வெளியே பறந்து பக்­கத்தில் சென்ற லொறியின்…

Read More

ஆசிரியர்கள் கையடக்க தொலைப்பேசி பாவிக்க தடை!

வடமேல் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர், சந்தியா குமார ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் கற்பித்தல் பணிகள் முடிந்தநிலையில் அவசியம் ஏற்படும்நேரத்தில் மாத்திரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஹிலரி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான்…

Read More

ஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 16.19 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஜோர்தான் பிரஜையான அமர் யூசுப் அல் சுதே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு பலாமரச் சந்தியில் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது…

Read More