Headlines

சோமவன்சவின் பூதவுடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள, பூதவுடலை தம்மிடம் கையளிக்குமாறு உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.

Read More

துருக்கியிடமிருந்து ரூ.4,999 கோடி கடனுதவி

துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார  உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 350 மில்லியன் டொலர் (4,999.75 கோடி ரூபாய்) வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியின் எக்ஷிம் வங்கியின் ஊடாக இந்த கடன்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கான ஒப்பந்தம் இலங்கை – துருக்கிக்கு இடையில் விரைவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசோக்லு மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற…

Read More

அரநாயக்க பகுதியில் 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடல்

கேகாலை – அரநாயக்க பகுதியிலுள்ள 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 36 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.

Read More

நாளை மட்டக்களப்பில் போராட்டம்!

ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Read More

யசூசி அக்காஷியை சந்தித்தார் மஹிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு மனிதநேய விவகாரங்களுக்கான அவசரநிவாரணப் பணியின் உப செயலாளர் நாயகமும், இலங்கை்கான ஜப்பானின் முன்னாள்தூதுவருமான யசூசி அக்காஷி அழைப்புவிடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,ரோஹித்த அபேகுணவர்தன, ஜயந்த சமரவீர, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஷன் ரணசிங்கஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஜூன் 10 ம் திகதி ஜப்பானிற்கு விஜயம்செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அலவி மௌலானாவின் மறைவு – அ.இ.ம.கா அனுதாபம் 

– ஊடகப் பிரிவு – மேல் மாகாண சபையின் முன்னால் ஆளுனர் மர்ஹ¬ம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அவர்களின் மரணச்செய்தி ஆழ்ந்த கவலையை தந்துள்ளது. முஸ்லிம்களின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான மௌலானா சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகள் இலகுவில் மறக்கக்கூடியதொன்றல்ல. சுதந்திரக்கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே, அக்கட்சியின் அங்கத்தவராக இருந்த அவர், கொள்கை பிரளாது கடைசிவரை அக்கட்சியிலேயிருந்து எல்லோரினதும் நம்பிக்கையையும் , நன்மதிப்பையும் பெற்றவராவார். சகலரிடமும் வேற்றுமை காட்டாது மும்மொழிகளிலும் சரளமாகவும் , அடுக்குத்தொடராகவும் நகைச்சுவையாகவும் பேசும்…

Read More

பேதங்களை கைவிட்டு நாட்டை கட்டியெழுப்ப வழிகாட்டுங்கள்!- ஜனாதிபதி

வெளிநாட்டு கடன் சுமையில் நாடு மூழ்கியிருக்கும் நிலையில், இந்த சவாலான சந்தர்ப்பத்தில், வாத பேதங்களை கைவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப அறிவூட்டலையும் வழிக்காட்டலையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கை இழந்திருந்த பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நாடு பெற்றுள்ள முன்னேற்றம்…

Read More

யோசிதவுக்கு பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்க்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தெஹிவளையில் கட்டப்பட்ட அதி சொகுசு மாளிகை குறித்த வழக்கு இன்று (16) கல்கிசை நீதவான் முன்னிலையில் எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறைச்சாலையிலும் பகிடிவதைகள்

பாடசாலை, பல்கலைக்கழகங்கள் என்ற நிலை மாறி தற்போது சிறைச்சாலைகளிலும் பகிடிவதைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகிடிவதைகளுக்கு முகம் கொடுத்திருப்பது வெலிகட மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாகி சென்றுள்ள சிறைச்சாலை காவலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காவலர்கள் தமது விடுதிகளில் தங்கியிருந்த போது கடந்த சில நாட்களுக்கு முதல் நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் சிறைச்சாலையில் உள்ள சிலரால் இவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இவர்கள் தாக்குதல் சம்பவத்திற்கும் முகங்கொடுத்துள்ளதாகவும், இந்த பகிடிவதையினைத் தாங்கிக்…

Read More

”எயார் சிற்றி” திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பம் : அமைச்சர் சம்பிக்க

மேல் மாகாண மற்றும் மாநகர திட்டத்தின் கீழ் அமையப்பெறவுள்ள “எயார் சிற்றியின்” நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ  ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று இரவு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் அவரை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று (16) அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டம் அரச அதிபரின் புஸ்பகுமார நெறிப்படுத்தினார். மாவட்டத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில்  இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் சிலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் காணப்பட்டன. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கு…

Read More