Headlines

ஆசிரியர்கள் கையடக்க தொலைப்பேசி பாவிக்க தடை!




வடமேல் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர், சந்தியா குமார ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் கற்பித்தல் பணிகள் முடிந்தநிலையில் அவசியம் ஏற்படும்நேரத்தில் மாத்திரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *