Headlines

அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி




பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ  ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று இரவு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் அவரை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *