Headlines

புதிய அரசியலமைப்பில் 4 இனங்களுக்கும் சமவுரிமை – சந்திரிக்கா

இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் நேற்று -11- இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றுஉரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவருமான சந்திரிக்காகுமாரதுங்க, இதனை தெரிவித்துள்ளார். இதன்போது சந்திரிக்கா, இலங்கை கடந்த பல வருடங்களாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியபோர் ஒன்றுக்கு முகங்கொடுத்ததாக குறிப்பிட்டார். போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாட்டினால் சமாதானத்தைவெற்றி கொள்ள முடியவில்லை. எனினும் இதனை முறியடிக்கும்…

Read More

ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

– பரீல் – அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா…

Read More

சஜின் வாஸினது வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

வெளிவிவகார கண்காணிப்புக்கான முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிடிய அறிவித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன சார்பில் சட்டத்தரணி அனுர பிரேமரத்ன நீதிமன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை நீதிபதியிடம் வெளியிட்டுள்ளார். தனது சொத்துக்கள் தொடர்பான கணக்கு விபரங்களை வெளியிடாமை குறித்து இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது….

Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு

பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச, இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை…

Read More

டிக்கெட் இன்றிப் பயணித்தால், ரூ.3,000 தண்டம்

– வி.நிரோஷினி – ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 3ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும். அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரயில்களில் பயணஞ் செய்யும்  பயணிகளின் பயணச்சீட்டுகளுக்காக, சலுகை அடிப்படையிலான கட்டணங்கள் அறவிடப்படினும், அவர்கள் அதனையும் செலுத்தத் தவறுகின்றனர். இன்னுஞ்சிலர், தாம் பயணிக்கும் வகுப்புகளை விடவும், கட்டணங்கள் கூடிய…

Read More

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் நீர் மாசடைந்து வருகின்றது. சுத்தமற்ற நீரை குடிக்கவும், குளிக்கவும் சமைக்கவும் உபயோகிக்க முடியாது. நோய்களால் பீடிக்கப்படுவர் மக்கள். எனவே ஏழை முதல் செல்வன் வரை குழந்தை முதல் முதியோன் வரை அனைவரும் அருந்தும் நீரும்…

Read More

வங்காளதேசத்தில் வன்முறை

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான்(73) டாக்கா சிறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய தலைவர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஜமாட் மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் சிட்டாங்காங் நகரில் மோதிக் கொண்டனர். கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஹ்மான் நிஜாமின் ஆதரவாளர்களை களைக்க ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர்…

Read More

வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

வடமாகாண பிரமாண அடிப்படை­யிலான மூலதன நன்கொடை வழங்கல் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேசத்­தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குட்பட்ட 6 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சி.அகிலதாஸ் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

Read More

குசல் பெரேராவின் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு  ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக…

Read More

பிர­தமர் தலை­மையில் இன்று விசேட கூட்டம்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூல­மாக பரிந்­து­ரை­செய்­யப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­பள உயர்­வுக்கு தோட்ட நிர்­வா­கங்கள் மறுப்புத் தெரி­வித்­துள்ள நிலையில் இன்­றைய தினம் (12) பிர­தமர் தலை­மையில் சம்­பள விடயம் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தவுள்­ள­தாக தொழில் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

Read More

பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம் : தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்

பிலிப்­பைன்ஸில் உள்ள இலங்­கைக்­கான தூத­ர­கத்­தினால் வெளிநாட்­டு­ அ­மைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு, நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­பவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­க­ அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் டுபாய் நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தோடு கடந்த 10 வரு­டங்­க­ளாக பிலிப்­பைன்ஸில் வாழ்ந்து வந்­துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெய­ரு­டைய மக­னொ­ருவர் இருந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­ப­வரின் உற­வி­னர்கள் எவ­ரேனும் இருப்பின் அல்­லது உற­வி­னர்கள் தொடர்­பான ஏதேனும் தக­வல்கள்…

Read More

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து…

Read More