Headlines

இஸ்லாத்தில் இணைந்த சீன பேராசிரியர்

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் சீனாவை சார்ந்தவர். துபாய் கல்வி நிறுவனம் ஒன்றி பேரசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னுடன் பணியாற்றும் முஸ்லிம் நண்பர்களின் நற்பண்புகளால் கவரபட்ட இவர் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார். இறுதியில் இஸ்லாமே உண்மை மார்க்கம் கடவுளின் மார்க்கம் வெற்றியின் மார்க்கம் என்பதை அறிந்து கொண்ட அவர் துபாய் இஸ்லாமிய தகவல் மையத்திற்கு வந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார். அந்த காட்சிகளைதான் படம் விளக்குகிறது.

Read More

லண்டன் மேயர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம்

லண்டன் மேயராக பதவியேற்ற பின்னர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம் பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை சாதிக் கான் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, இந்த பேருந்துகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய குறைந்தளவு 1.50 பவுண்ட் கட்டணம் உள்ள பயணிச்சீட்டு மட்டும் போதுமானது ஆகும்….

Read More

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு!

ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு அளித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில்…

Read More

அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் மின்சாரம்! அஜித் பெரேரா

மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை 5.00 மணியாளவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார விநியோக அமைப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா விஜயத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Read More

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் – சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேலும் மேம்படுமென அமைச்சர் றிசாத் தெரிவித்தார். சீனாவின் கனியவள நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று (12/05/2016) சந்தித்து, இலங்கையின் கனியவளத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிகள், இந்தத் துறையில் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், இலங்கையின் பூகோள நிலைமை கனிய…

Read More

மட்டு மாவட்ட செயலகத்தில் ஐ.நா அலுவலகம்!

அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இணைச் செயற்பாடுகள், கொள்கைகளுக்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அலுவலகம் நேற்று புதன்கிழமை(11) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளும், பங்காளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்களப்பு…

Read More

மூவினங்களையும் பிரதிபலிக்கும் இராணுவமே நாட்டுக்கு தேவை!

நாட்டிற்கு தேவை தமிழ், சிங்கள, முஸ்லீம் இளைஞர் யுவதிகளை கொண்ட அனைத்து இனங்களையும் பிரதி பலிக்கும் இராணுவமே என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரவித்துள்ளார். நாட்டிற்காக உயிர் நீர்த்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அண்மையில் (10.05.2016) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண…

Read More

இன்று சர்வதேச தாதியர் தினம்!

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் (அவசியம் வாசியுங்கள்)

எனக்கு காயம் சுகமாகி நான் எப்போது வீடு போவேன்? இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் எதிர்பார்ப்பு. சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு மாதங்களும் அந்த சூடு வைக்கப்பட்ட சிறுமியின் சூட்டுக் காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சைகள்…

Read More

ஹிரோ­ஷிமா நக­ருக்­குச் செல்லும் ஒபா­மா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை. இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார். பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப் ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும்…

Read More