Headlines

அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ள நீர் வீதியில் நிரம்பி வழிவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வியாபார நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பனவற்றில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது பல முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்

பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் அடைமழை

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

Read More

மாணவனை தாக்கிய பஸ் நடத்துனர் கைது

பஸ் நடத்துனரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பஸ் நடத்துரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை கினிகம பகுதி பாடசாலையொன்றில் ஆண்டு 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் ஒருவனே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் பண்டாரவளை பிராந்திய இ.போ.ச.டிப்போ பஸ் நடத்துனர் ஒருவரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சில் பாடசாலைக்குச் செல்வதற்காக ஏறிய இம்மாணவன் பஸ்சில் செல்வதற்கான (பாஸ்)…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு

-எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி,  இரண்டு மாத சிகிச்சையின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து சிறுமியின் தாயின் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார். கடந்த 11.3.2015 அன்று குறித்த சிறுமி வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 13.3.2015 அன்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சையின் பின்னர்…

Read More

வத்தளை நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவு

சிலரால் உடைத்து நாசப்படுத்தப்பட்ட, வத்தளை, களுஎலவுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைப்பயிற்சிப் பாதை, குடியிருப்புப் பகுதிவரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர வடிகாலமைப்புத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பாதை, மக்கள் பாவனைக்காக விரைவில் திறக்கப்படும் என காணி, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் இணைப்புச் செயலாளர் மிஹிரி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை : 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் கடந்த ஆட்சிக் காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறும். நிறுவனத்தின் தற்போதைய கடன் காரணமாக அதை கூட்டிணைந்த நிறுவனமாக மாற்ற அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

Read More

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று வகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். குருணாகலை வெல்லவ மத்திய மகா வித்தியாலத்தியத்தின் புதிய இரு மாடி கட்டிடம் மற்றும் கணினிக்கூடம் திறப்புவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று அவசியம் என்பது தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கமைய வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தவிர கல்வி மேம்பாட்டுக்காக எதிர்காலத்தில் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஆயிரம்…

Read More

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த மகாகும்பா விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பா. உ நவவி, திருகோணமலை மாவட்ட பா.உ அப்துல்லா மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாத் தலைவர் ரிஸ்வி முப்தி, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஹியா, ஜாமிய்யா நளீமிய்யா பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான Dr. ஏ.சி.அகார் முஹம்மது, மற்றும் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின்…

Read More

ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…

Read More

உயர்தரப் பரீட்சையை ஏப்ரலுக்கு மாற்றுவது குறித்து பேச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால்…

Read More