Headlines

ரோஸியின் மனு தள்ளுபடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின், விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரியே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்

Read More

தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம்

2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வருடம் ஜூன் முதலாம் திகதிக்கு 18 வயதை பூர்த்தியாகும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வாக்காளர் இடாப்பு பத்திரத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வதற்கு முடியுமாகின்றது. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி இடாப்பு…

Read More

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மக்களுக்கு அவசர நிவாரணம்! றிஷாத்தின் கோரிக்கையை ஏற்று யாப்பா உடன் நடவடிக்கை

– சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,…

Read More

வெள்ளத்தினால் நிரம்பியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை

பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலங்களில் இப்பாடசாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் காய்த்திருக்கும் அதிசய மாங்காய்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள இந்த அதிசய மாங்காயில் மனிதமுகத்தில் உள்ளது போலவே கண்கள், மூக்கு, வாய் போன்றவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகள் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் வெளியானபின்னர்  சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது. இதேபோல், நைஜீரியா நாட்டிலும் ஒரு மாங்காய்…

Read More

வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அதன் அதிபராக  நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுலாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் நிறுவனங்களில் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். இதனால் அதிபர் மதுரோ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே…

Read More

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை:  011 2 343 970,…

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

தகவல் அறியும் உரிமை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…

Read More

கொழும்பில் வெள்ளம்

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Pic By: Sujeewa Kumar (நன்றி வீரகேசரி)

Read More