யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் பகுதிகள், மழை நீரில் மூழ்கின
-பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பகுதிகள் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழக்கை பாதிப்படைந்துள்ளதை காண முடிந்தது. நேற்று முற்பகல் 11.30 மணி முதல் தொடர்ச்சியாக பெருமழை அப்பகுதிகளில் பெய்துவருகின்றது. சில வீதிகள் ஆங்காங்கே வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களில் நிலவிய கடுமையான வெப்பத்தையடுத்து நேற்று முற்பகல் முதல் கன மழை தொடர்ந்த வண்ணமுள்ளது. இதனால் கிராம சேவகர் பிரிவுகளான ஜே-85இஜே-86இஜே-87 இஜே-88 பகுதிகளில்…
