Headlines

ஜீன்ஸ் ஆடை அணிவதற்கு தடை.!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார். மேற்படி நாடளாவிய தடைகளானது சீனாவுக்கு அண்மையிலுள்ள யங்காங் மாகாணம் மற்றும் வட ஹம்கையொங் மாகாணம் என்பவற்றை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் 7 ஆவது கூட்டத்தையொட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஆசிய பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 03ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும்,பிரசாந்தனுக்கு பிணை வழங்கக் கோரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ம் திகதி குறித்த வழக்கு…

Read More

மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

Read More

களனிவெளி பாதையில் ரயில் தடம்புரண்டது

களனிவெளி பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில், கொஸ்கம-மிரிஸ்வத்த எனுமிடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளது. பெட்டியொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என்றும் இதனால் 20-30 சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை, தண்டவாளத்தில் நிறுத்தும் வரையிலும் அப்பாதையின் ஊடாக ரயில்சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அக்கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Read More

லக்கல ஆயுத திருட்டின் பின்னணி என்ன?

லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி திருட்டு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதற்கமைய துப்பாக்கிகளை திருடிய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

இலங்கை வரும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி…

Read More

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஒருநாள் வேலைத்திட்டம்!

உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய வேலைத்திட்டங்களை சவாலாகக் கொண்டு ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நாளை காலை 8 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் பிரதி செயலாளர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் உள்ளிட்டோர்…

Read More

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்குவதாகவும் மற்றும் சீன நிறுவனம்  உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Read More

‘தேஜாஸ்’ மீது இலங்கை கவனம்

இந்திய தயாரிப்பான ‘தேஜாஸ்’ என்ற இலகுரக போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகிஸ்தான் உற்பத்தியான JF-17  ரக போர் விமானத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை முன்னர் அவதானம் செலுத்திய போதும் பின்னர், அது கைவிடப்பட்டு, தற்போது இலங்கையின் கவனம் தேஜாஸ் மீது திரும்பியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இதேவேளை, தேஜாஸ் விமானம் தொடர்பில் பல நாடுகளும் தற்போது அவதானம் செலுத்திவருவதாகவும் இந்திய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சைபர் தாக்குதல்: இலங்கையர்கள் எண்மர் அடையாளம்

பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

குளியாப்பிடியாவில் 3 கைக்குண்டு மீட்பு.!

குளியாப்பிடிய – ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய விகாரை சந்தியில் இன்று காலை 3 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரையின் கீழ் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

எருக்கலம்பிட்டி: பழைய மாணவர்களின் ஒன்று கூடல்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளிலான ஒன்று கூடல் ஒன்றினை கல்லூரியின் அதிபர் மற்றும் பழையமாணவர்களின் சங்கமும் இணைந்து எதிர் வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள பி அறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக வடமாகாண சபை ஆளுநர்…

Read More