Headlines

கிணறு வெட்டும் போது வெளிவந்த மர்மப்பொருட்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்களை வெளியே எடுத்துள்ளதாகவும், மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த…

Read More

தண்டனையை நெருங்கும் ஞானசார

ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என…

Read More

கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஒபாமா மீது பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க…

Read More

பம்பலபிட்டி மின்மாற்றியில் தீ : தொடரும் மர்மம்

பம்பலபிட்டி  லோரிஸ் வீதியிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியில் இன்று (29)  காலை திடீரென தீப்பிடித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரையும்  கண்டறியப்படவில்லை.

Read More

இன்றும் மழை பெய்யும்

இன்றைய தினமும் (29) நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Read More

‘இலங்கைக்கு ஆதரவளித்தமை சரியே’

இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார். இலங்கைக்கெதிராக உலக வல்லரசு நாடுகள் பல ஒன்றாகக் கூடியபோது, அந்தக் கூட்டணியில் இணைவதிலிருந்து அவுஸ்திரேலியா தள்ளியிருந்ததோடு, இலங்கையோடு நெருங்கிச் செயற்பட்டிருந்தது. அப்போது, அவுஸ்திரேலியாவின் பிரதமராக டொனி அபொட்டே செயற்பட்டிருந்தார். இந்நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் பத்தியொன்றை எழுதியுள்ள டொனி அபொட், ‘இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் எடுக்கப்பட்ட கடுமையான, ஆனால் அனேகமாகத் தவிர்க்க…

Read More

றோ அதிகாரி கைது

இந்தியப் கடற்படையில் கடமைபுரியும்  இந்திய புலனாய்வுதுறை அதிகாரியொருவரை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது. டான் செய்தி சேவையின் தகவல்களின்படி பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட றோ அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக  இஸ்லாமாபாத் நகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். பலூசிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுடன்; தொடர்புபட்டிருப்பதுடன் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுவுடன் இந்த உளவாளிக்குத் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த உளவாளி,…

Read More

‘நான் தனியாகச் செய்யவில்லை’

‘அன்று அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது’ என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது’…

Read More

தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையின் வாக்காளர்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்கிறது!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சிறப்பான எதிர்காலம், ஜனநாயகம் என்பன இந்து- பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வந்துள்ள அமெரிக்கா கடற்படை கப்பலை வரவேற்கும் நிகழ்வின்போது கெசாப் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் பல முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இலங்கை…

Read More

ஒரு பில்லியன் பெறுமதியான தரமற்ற மருத்துவப் பொருட்கள்!- கோப்குழு

கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பில்லியன் ரூபாய்களுக்கும் மேற்பட்ட தரமற்ற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப் இதனை கண்டறிந்துள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெந்தி தெரிவித்துள்ளார். குறித்த பொருட்கள் தரம் குறைந்த பொருட்கள் என்று இலங்கை மருந்தாக்கல் திணைக்களம் இறக்குமதி செய்யப்பட்ட பின்னரே தெரிந்துகொண்டமையானது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இதில் தொடர்புடைய அதிகாரிகளை கோப் குழு அழைத்து விசாரணை செய்யும்…

Read More