வடக்கின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற 10 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு கலந்தாலோசித்து அமைச்சர்கள் குழுவை இறுதி முடிவு செய்யவார் என்று தெரிகிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர்கள்…
எஸ்.அஸ்ரப்கான் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை இனவாதத்தின் கோரப்பிடிக்குள் தள்ளி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்திய அரசைத் துாக்கி வீசுவதற்காக ஒன்றுபட்டு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காய் ஒன்றுபட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி தெரிவித்து கட்சி சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றில…
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை…
இலங்கையின் புதிய அரசு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க புதிய அரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனவே அதைத் தவறவிடாது செயற்படுமாறு சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியத் தலைமை நிர்வாகி அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 18ம் திருத்தச் சட்டம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பரந்த அதிகாரத்தை அளிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன திரும்பப் பெறப்பட வேண்டும். அத்துடன் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை…
இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியல்; பந்து விக்ரமவின் பொறுப்பின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து இரகசியத் தகவல்கள் உள்ளடங்கிய கணனி ஹாட்டிஸ்க் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனுள் இலங்கையின் அனைத்து துறைமுகங்களுக்கும் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரகசியத் தகவல்கள் அத்துடன் ஹம்மாந்தோட்டை துறைமுகம் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனைத் தவிர்த்து, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமையே தன்னுடைய சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையின் மெதமுலனவிற்கு சென்றார். அங்கு, கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே வீசா பெறத் தேவையில்லை. வீசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த…
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு – நம்பிக்கையாகவும் உள்ளது. அத்துடன் வெற்றிகரமான – அமைதியான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். தேர்தல் பரப்புரையின் போது எதிரணியின் ஆதரவாளர்கள் மீது கஹவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பெல்மடுள்ளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் கடந்த 5ம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல – நியுபேர்க் – நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தி இருந்தனர். இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று…