Headlines

புதிய ஜனாதிபதி செயலாளர் – பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதியின் புதிய செயலாளராக தற்பொழுது பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அபயக்கோன் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிகக்பட உள்ளார். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளாராக சுற்றாடல்த்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் பஸ்நாயக்க நியமிகக்ப்பட உள்ளார்.

Read More

சிறுபான்மை மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும் – றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள்…

Read More

வெற்றிக்களிப்பு

வெற்றிக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க…

Read More

றிஷாத் பதியுதீன் மற்றும் ஹக்கீமுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால

முன்னாள் அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும்    ஹக்கீமுக்கு ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிநேசன நன்றி தெரிவித்துள்ளார்.சுதந்திர சதுக்கத்திலிருந்து தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க்ண்டநன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Read More

யார் இந்த மைத்திரி ?

பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951ஆம் ஆண்டுஇ செப்டெம்பர் 3ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்தி ரிபால சிரிசேன விவசாயத்துறையில் நாட்டம் இருந்தமையால் 1973ஆம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத் தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். மாணவர் பருவத்தி லேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர்…

Read More

சரிந்தது மஹிந்த அரசு!

இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். கடந்த கால அராஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்ச தனது தந்தையாரின் அரசியல் வழியிலேயே தானும் அரசியலில் நுழைந்தவர். 1970 ஆம் ஆண்டு சுதந்திரக்…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வரலாற்று சிறப்புமிக்க முதலாவது உரை

இர்ஷாத் றஹ்மத்துல்லா நேற்று இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சத்திய பிரமாண நிகழ்வில் நாடடு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது சமூக,அரசியல் ,பொருளாதார…

Read More

மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க மைத்திரி மறுப்பு

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்காது நீதிபதி ஸ்ரீபவன் முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளார்.

Read More

பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க

அஸ்ரப் ஏ சமத் இன்று பி.பகல் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தற்போது கடமையில் உள்ள பிரதம நீதியரசர் மோகான் பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார். அவர் உயர் நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க மீள பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப் பட உள்ளார். அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்று இரவு நியமிக்கப்பட…

Read More

ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல்; ஹக்கீம் ,றிஷாத் பங்கேற்பு

முகம்மட் ராசித் ஹனான் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்ற நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசியின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், சரத் பொன்சேக்கா, அதுரலிய ரத்னதேரர், மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், கரு ஜெயசூர்யா, அர்ஜுனா ரணதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

மைத்திரிக்காக வாக்களித்த மக்களுக்கு எனது இதயபூர்வ நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும்….

Read More

வாக்களிக்கச் செல்லாத இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் ஈடுப்படாது தவிர்த்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூதின் வாக்கு ஏறாவூர் அல் – அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையிலும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமடின் வாக்கு ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தபோதிலும் இவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரவில்லை என கூறப்படுகின்றது. இறுதிக் காலக்கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்…

Read More