Headlines

ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து




இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜூலி பிஷப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *