Headlines

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மா பிரஜைகள் – மலேசியா முன்னால் பிரதமர் மகாதீர் முஹம்மத் அதிரடி!

– அபுசெய்க் முஹம்மத் – 1.பர்மா அரசு ரோஹிங்க்யா குறித்து விலகி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ..அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற பர்மா அரசு நடவடிக்கை எடுக்கின்றது.. 2.ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மிய நாட்டின் ஒரு அங்கத்தினராக 800 வருடங்களுக்கும் மேலாக இருந்து இருக்கின்றார்கள். 3.முன்னர் மியான்மாரின் போதும் பின்னர் பர்மாவாக மாறிய போதும் அவர்கள் பிரஜைகளாக கருதப்பட்டார்கள். 4.பர்மா அரசு ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை தன் சக பிரஜைகளாக ஏற்றுகொள்ள வேண்டும் . 5.பௌத்தர்கள் ஆதிக்கம் மிகுந்த…

Read More

சேலை உடுத்த ஓநாய்

சேலை உடுத்த ஓநாய் ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி ‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…? நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….? காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான் மூளை எடுத்தவன் உண்ணுகிறான் வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..? வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா…? பாலை வனம்போல மாறும் மனங்களால் பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம் சேலை உடுத்தந்த ஓநாய் ‘விராதி’னால் மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்… ஏழை எமக்கின்று வாழவழிகொடு ஏக இறைவனே கெஞ்சுகிறோம் நாளை விடியுமா..? நாளை…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை

கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவோம். நாளை ஜும்மா தொழுகையின் பின் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும்” பர்மா நாட்டில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இறைவனிடன் மன்றாடுவோம்”எனும்கருப்பொருளில் துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் தொழுகையில் குனூத் இனணத்துகொள்ளுமாறும் அவர்களின் நிம்மதி வாழ்வுக்காகவும் பிராத்திப்போம். பணிவுடன். ……… அனைத்து சமூக இயக்கங்கள்.

Read More

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று நீங்கள் எண்ணுதல் கூடாது இது ஒரு தேசத்தின் கண்ணீர் பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன் இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம் தேசபிதாக்களே நீங்கள் மனித நேயத்தை மடியில் சுமந்து வந்திருப்பதாய் அடிக்கடி நான் சந்தோசிப்பேன் ஆறாயிரம் ரூபாவிற்குள் பதவியேற்றது எனது முதல் மகிழ்ச்சியானது முதலில் நான் உங்களை நம்பவில்லை நம்பும்படியாக முந்திய நிலைவரம் இருக்கவில்லை பிறகு பிறகு நம்பிக்கை பிறந்தது தலைவர்களுக்கு குறைவாயிருக்கிற நேயமானது…

Read More

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு குற்றச்சாட்டுடன் வலுவடைந்த ரோஹிங்கியா தாக்குதல்களும்.. இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து வரும் இனவாத தாக்குதல்களும்

-தில்ஷான் மொஹம்மத்- சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2012/05/28) மியன்மாரில் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பின்னர் பெருன்பான்மை பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் இனக்கலவரம் உலக செய்திகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மியன்மார் அரசு ஆதரவுடன் கூடிய ஓர் திட்டமிடப்பட்ட கடுமையான வன்முறை ரோஹிங்கியா மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பல கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரோஹிங்கியா…

Read More

2ஆம் வகுப்பில் பயணித்த 52 பேர் கைது

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைதுசெய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 3 ஆம் வகுப்புக்கான பயணச்சீட்டை பெற்றுகொண்டு 2ஆம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 210ரூபாவை தண்டமாக அறவிட்டுள்ளதாகவும் ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மருதானை- மாத்தறை மற்றும் பொல்ஹாவலை-கல்கிஸ்ஸ ஆகிய ரயில்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

இலங்கைக்கு எந்த நாட்டுடனும் விரோதம் இல்லை!

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷனி கோலோன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்தமையை இங்கு சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறினார். இலங்கை உலகின் எந்தவொரு நாட்டுடனும் விரோதம் காட்டுவதில்லை எனவும்…

Read More

20 நிறைவேறாது பாராளுமன்றை கலைக்க இடமளியோம்!

20ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் இணங்கியுள்ளதாக அவர் கூறினார். அப்படி இருக்கையில் அமைச்சரவையில் இதற்கு இடையூறு ஏற்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தேரர் தெரிவித்துள்ளார். 20ம் திருத்தத்தை நிறைவேற்றாது பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப்பட மாட்டதெனவும் முடிந்தால்…

Read More

ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ சார்பில் குருநாகல் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. 25,000 ரொக்கப் பிணையிலும் 25 லட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் முன்னாள் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சதோச நிறுவனத்தில் 50…

Read More

இன்று வர முடியாது: FCID பிரிவிற்கு சஷி வீரவன்ச அறிவிப்பு

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவென சஷி வீரவன்சவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு இன்று அழைத்திருந்தது. எனினும் இன்று தன்னால் வர முடியாது என்றும் வேறு தினம் ஒன்றை வழங்குமாறும் சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார். மற்றுமொரு தினம் வழங்குவது…

Read More

பேப்பரில் செல்போன் உருவாக்கி அமெரிக்க பெண் சாதனை!

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல். இவர் பேப்பரில் செல்போன் தயாரித்து சாதனை படைத்துள்ளார். இந்த செல்போன் 3 கிரீடிட் கார்டு அளவு பருமன் ஆனது. இது மீண்டும் அழித்து விட்டு தயாரிக்க கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனில் ஒருவர் மறுமுனையில் இருந்து பேசுவதை கேட்க மட்டுமே முடியும். பதிலுக்கு டயல் செய்து பேச முடியாது. இதை 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே பேச முடியும். அதன்பின்னர்…

Read More

ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம். அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக்  கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின்…

Read More