Headlines

குழந்தை பெறும் ஒவ்வொருவருக்கும் ஏழரை இலட்சம் ரூபா பரிசு !

சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி போர்த்துக்கல் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அங்கு பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. அதிலும் அல்கோடிம் என்ற கிராமத்தில் 0.9 என்ற மிகவும் குறைவான அளவிலேயே பிறப்பு விகிதம் உள்ளது. அங்கு கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விட்டனர். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு அந்தக் கிராமத்தில் உள்ள தம்பதிகள்…

Read More

ஏறாவூரில் சிறுவன் கடத்தப்பட்டு தாக்குதல்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில்  12 வயதுச் சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வீதியைச் சேர்ந்த முஹம்மத் அஸ்லம் (வயது 12) என்ற மாணவனே கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட சிறுவன் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சந்தேக நபரைத் ஏறாவூர் பொலிஸார் தேடி…

Read More

பொது பல சேனாவுக்கு இஸ்லாமிய வங்கி குறித்த விளக்கம்

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் தூய வழிகாட்டலிலும் வாழ்வியலிலும் குறைகளைத் தேடி அலையும் பொது பல சேனா இன்று, ஷரீஆ வங்கி முறையை தடை செய்ய வேண்டும் என மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி வாசிக்கக் கிடைத்தது. உண்மையில் அவர்களது கோரிக்கைகளும் அபிப்பிராயங்களும் பரிதாபப்படவே வைக்கின்றன. அவர்களிடம் இனவாத வெறி வளர்ந்துள்ள அளவிற்கு பொருளியல் மற்றும் வங்கியியல் அறிவு கிடைக்கவில்லை. 2008 ஆண்டின் உலக நிதி நெருக்கடிக்கு ( Globel financial crisis ) மூல…

Read More

ரமழான், தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 17ம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறும். உலமாக்கள், கதீப் மார்கள், ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மற்றும் தக்கியா, ஸாவியா ஷரீஆ கவுன்சில் அன்ஜுமன் பாயிஸ் இ ரஸா மேமன் ஹனபி பள்ளி ஆகியவற்றின்…

Read More

கையொப்பம் திரட்டலுக்கு கைகொடுங்கள்

இஸ்ஸதீன் றிழ்வான் சென்ற அரசு நிஜ துப்பாக்கிகளை போலிகள் என்று ஊடகங்களுக்கும் நீதிக்கும் முன்னிலையில் சொல்லி மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசு மரிச்சிக்கட்டியை வில்பத்து என்று சொல்லி எங்களை ஏமாற்றமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருந்த போதும் ஊடகங்கள் தொடர்ந்தும் வில்பத்துவை பாதுகாப்போம் என்ற பொயரில் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் பாரிய போலிப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். நாடளாவிய ரீதியில் சாத்வீகமான வழிகளை மட்டும் பயன்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுப்போம் என்பது முஸ்லிம்களின்…

Read More

தடைகளை தகர்த்தெறிவோம் : ஜூம்ஆவுக்குப் பின் தயாராகுவோம்

ஏ.எச்.எம் பூமுதீன் வடமாகாண  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12) ஜூம்ஆவுக்குப் பின் முழு முஸ்லிம்களும் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. ஜூம்ஆ தொழுகைக்கு பின் தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்ற தடைகளை தகர்த்தெறிய புறப்படுமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இவ்வாறு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தயாராகி வருகின்றனர் ஹலால் ,ஹபாயா மற்றும் பள்ளிகளின் மீதான தாக்குதல்களின் போது முஸ்லிம் சமுகம் அடைந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை போன்று வடமாகாண…

Read More

சூறா கவுன்சிலின் ஊடகவியலாளர் மாநாடு

அஸ்ரப் ஏ சமத் அரசாங்கம் கொண்டுவரும் 20வது தேர்தல் சீர்திருத்ததினை எதிர்காலத்தில் அமுல்படுத்தினால் சிறுபாண்மைச் சமுகமான முஸ்லீம் சகமுகத்தினது தற்போதுள்ள பாராளுமன்ற பிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்பட்டு விடும். இச் சட்டத்தினால் முஸ்லீம் சமுகம் தமது இனவிகிதாசரதிற்கு ஏற்ப 10.3வீத முஸ்லீம்களுக்குரிய பாராளுமன்ற பிரநிதித்துவம் பெறும் வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும். அல்லது இரட்டை வாக்குமுறை மாவட்ட விருப்பு வாக்கு முறையை உள்படுத்தப்பட வேண்டும். என ஷூரா கவுன்சில் கோரிக்கை. எமது அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முஸ்லீம்…

Read More

பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்கு உதவி

இர்ஸாத் ஜமால்தீன் குவைத்தில் இயங்கும் அறுகம்பே அந்நஜாத் நலன்புரி ஒன்றியத்தினரால் பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்குதரைவிறிப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அப்பின் தலைவர் அப்துல் ஹலீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் “ரமழானுக்கு பள்ளிவாயல்களை அழங்கரிப்போம்” என்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக குறித்த தரைவிறிப்பு இன்று10 வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பின் முன்னால் செயலாளர் மெளலவி யூ.எல்.அப்துல் அஸீஸ், முன்னால் தலைவர் எம்.ஏ.ஏ சித்தீக், பொருலாளர் மாஹீர் சகிதம் ஏனைய உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிறுவாக சபைத் தலைவர் மெளலவி எஸ்.எச் அப்துல்…

Read More

கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் –  றிஷாத் பதியுதீன்

வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராக உள்ள ஜூம்மாப்பள்ளி வாயில்களில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து சீட்டில் உங்கள் கையெழுத்தை வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். எமது உரிமைக்காய் என்றும் போராடுபவர்களாகவும் தன்மானமுள்ள முஸ்லிம்களாகவும் இருக்க அல்லாஹ் என்றும் துணை இருப்பானாக! –  றிஷாத் பதியுதீன்

Read More

நான் கட்சி மாறவில்லை.. பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டாம்

-எம்.ரீ.எம்.பாரிஸ்- கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேன்டாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன். என  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு விஷேட பேட்டி.. இலங்கையிலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற சபைகளும் கலைக்கப்பட்டு இந்நாட்டு மக்கள் புதியதொரு பாராளு மன்ற தேர்தல் ஒன்றையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்பாத்து காத்திருக்கும் இக்கால கட்டத்தில் தாம் சார்த்த கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்…

Read More

கப்பல் கூட்டுத்தாபனத்தின் கப்பல்கள் எல்லாவற்றையும் கடந்த அரசாங்கம் விற்றுவிட்டது  

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் முன்னைய காலத்தில் 20 க்கும் மேற்பட்ட கப்பல்களை தம்மகத்தே வைத்திருந்தது. ஆனால் தற்போது கப்பல் கூட்டுத்தாபனத்திடம் கப்பல்கள் எதுவும் இல்லை எனவும் அனைத்து கப்பல்களையும் கடந்த அரசாங்கம் விற்று விட்டது எனவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கப்பல் கூட்டுத்தாபனத்தின் 44 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கொழும்பு துறைமுகத்தில் உள்ள island wisdom கப்பலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

Read More