ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு: ஆசிரியை ராஜினாமா!
தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேரள சமாஜத்தின் நிர்வாகத்தில் ஜூபில என்ற பள்ளிக்கூடம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷினா என்ற ஆசிரியைக்குக் கடந்த மே மாதம் வேலை கிடைத்தது. ஜூனில் பள்ளி திறந்ததும் ஹாஷினா வேலைக்குச் சென்றுள்ளார். தலையில் ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு வந்த ஆசிரியை ஹாஷினாவிடம் முதல் நாளிலேயே, “இதற்குப் பள்ளி நிர்வாகம்…
