Headlines

கத்தாரில் இஸ்லாமியக் கருத்தரங்கு

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் பொய்யான சாயங்கள் கழுவப்பட்டுப் போகும். இந்த அடிப்படையில் ‘இஸ்லாத்தில் நடுநிலைக் கோட்பாடு’ என்ற தொணிப் பொருளில் கத்தாரில் உள்ள இலங்கை இஸ்லாமிய மையம் 22.23.24.25.26 ஆகிய தினங்களில் ஐந்து நாட்கள் தொடரான ஒரு கருத்தரங்கினை ‘துமாமா’ வில் உள்ள மஸ்ஜித் ஆயிஷாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு அஸர் தொழுகை…

Read More

ரமழான் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது! ஒபாமா பெருமிதம்!

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த முறை இப்தார் நிகழ்வுக்காக முஸ்லிம்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த அழைப்பின் மூலம் அமெரிக்க சமூகங்களின் பன்முகத் தன்மை மற்றும் தேசப்பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் தமது வழிபாட்டு சுதந்திரத்தை அனைவரும் மதித்து பகிர்ந்துகொண்டமையும் என்னுள் மீளவும் நினைவூட்டப்படுகிறது….

Read More

சவுதியில் பணிபுரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது: “சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு…

Read More

அனைத்து கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க ஒருபோதும் உடன்படமாட்டேன்!  பிரதமர் அறிவித்ததாக றிஷாத் பதியுதீன் தெரிவிப்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.. அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்றும் பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சிறிய மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடான சந்திப்பின்…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்மும் சர்வதேச மயப்படுத்தலின் அவசியமும்

ஏ.எச்.எம்.பூமுதீன் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இருள் சூழ்ந்த யுகம் இன்று 25வது ஆண்டு எனும் வெள்ளி விழாவை தொட்டு நிற்கின்றது. 1990ம் ஆண்டு ஐ.தே.க.வின் அரசாங்க காலத்தில் வெளியேற்றப்பட்ட இந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் இற்றை வரையான ஐ.தே.க.வின் மூன்றாவது தடவை ஆட்சிக் காலத்திலும் கூட அதே இருள் சூழ்ந்த துயரத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சிக் காலத்தில் வெளியேற்ப்பட்ட மக்களை அவர்களின் சொந்தக் காணியில் மீள்குடியேற்ற வேண்டிய தார்மீகக் கடமையை கொண்டிருந்த ஐதேக…

Read More

தினமொரு நபிமொழி – 2

ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். (முஸ்லிம், அஹ்மத்)  நபிமொழி

Read More

என்னமா! இப்படி பண்றீங்களே மா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே முன்னாள் போராளியொருவர்…

Read More

இஸ்ரேலில் கிறிஸ்தவ தேவாலயம்  தாக்குதல்: 16 யூதர்கள் கைது

இஸ்ரேல் வட பகுதியில் தப்கா என்ற இடத்தில் கலிலீ கடற்கரையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு இயேசு கிறிஸ்து 5 ஆயிரம் பேருக்கு 5 அப்பங்கள் மற்றும் 2 மீன்களை வயிறாக திருப்தியுடன் உணவளித்து அற்புதம் செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். எனவே, அங்கு தினமும் 5 ஆயிரம் பேர் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். அந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் புகுந்து மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினார்கள். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தம்…

Read More

50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து தீவில் முதல் குற்ற வழக்கு

இங்கிலாந்தில் உள்ளது ஸ்காட்லாந்து. அங்கு கன்னா என்ற ஒரு குட்டித் தீவு உள்ளது. அதன் மக்கள் தொகை 26 பேர் தான். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடப்பதில்லை. எனவே, இங்கு போலீஸ் நிலையம் எதுவும் இல்லை. கடந்த 1960–ம் ஆண்டில் இங்குள்ள குரு தேவாலயத்தில் ஒரு மரப்பலகை திருட்டு போனது. அதை திருடியவர் யார் என இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் 55 ஆண்டுகளுக்கு…

Read More

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்தால்; இனி கூகுளில் தேடலாம்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் செய்து கொள்ளவும். லிங்க் :http://goo.gl/8K4a3O கூகுளில் தேடுவது எப்படி?கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும்…

Read More

தேர்தலில் ஐ.தே.க. தனித்து களமிறங்கும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் தலைமையில் கூடிய செயற்குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை, தேர்தல் தொடர்பிலான முடிவுகள் மற்றும் வேட்புமனு குழுவை நியமிப்பதற்கான அதிகாரங்களை கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

Read More

மட்டக்களப்பு மாவட்ட புதிய, பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி. சம்சூதீன் நியமனம்

– பழுலுல்லாஹ் பர்ஹான்- இலங்கை பொலிஸ் திணைக்களத்;தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி.சம்சூதீன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி  மாவட்டத்திற்கான 14வது பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீ.பி.சம்சூதீனுக்கான பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்;தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது மட்டு-மாவட்ட பிரதிப்…

Read More