கத்தாரில் இஸ்லாமியக் கருத்தரங்கு
-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் பொய்யான சாயங்கள் கழுவப்பட்டுப் போகும். இந்த அடிப்படையில் ‘இஸ்லாத்தில் நடுநிலைக் கோட்பாடு’ என்ற தொணிப் பொருளில் கத்தாரில் உள்ள இலங்கை இஸ்லாமிய மையம் 22.23.24.25.26 ஆகிய தினங்களில் ஐந்து நாட்கள் தொடரான ஒரு கருத்தரங்கினை ‘துமாமா’ வில் உள்ள மஸ்ஜித் ஆயிஷாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு அஸர் தொழுகை…
