Headlines

சீனாவை இஸ்லாம் ஆளும்!

உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும் அதன் பொருளாதார முறைமைக்குமாகும். ஆனால் சிகப்பு தேசம் எதற்காக இஸ்லாத்தை தன் நாட்டில் ஒடுக்க முனைகிறது..? தனது இராணுவ பூட்சுகளை பாதுகாப்பு என்ற பெயரில் ஷின்-ஷியாங்கின் மூலை முடுக்கெல்லாம் பதிக்க முனைகிறது..?. கன்பூஷியஸ் பாதையில் சில ஒழுக்க…

Read More

“மஹிந்தவுக்கு  வேட்புமனு, இறுதியில் எந்த மாற்றமும் இடம்பெறலாம்”  

-எம்.எஸ். பாஹிம்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை வழங்கியுள்ளோம். இதற்கு மாற்றமாக மோசடி குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் சு.க.விலிருந்து விலகுவதா மாற்று முடிவு எடுப்பதா என்பது…

Read More

கத்தார் கலைஞர் மன்றம் உதயம்

கத்தார் வாழ் இலங்கை கலைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கத்தார் கலைஞர் மன்றத்தை இன்று (10) அங்குராப்பணம்செய்துவைத்துள்ளனர். கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கென பல்வேறு அமைப்புக்கள் இயங்கிவந்தாலும் கலைஞர்கள், படைப்பாளிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் ஊக்குவிக்கும் எந்த அமைப்புக்களும் இதுவரை இல்லை என்பதை கவனத்தில்கொண்டுஅதேநேரம் எங்களை நாங்களே தத்தெடுக்கும் ஒரு முயற்சியாய் இந்த மன்றத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் அங்குராப்பண நிகழ்வில் கீழ்வரும் நிருவாகம் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளது; தலைவர் எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் செயளாலர் Free visa குறும்பட இயக்குனர் ஸம்சுல் A ரசீட் பொருளாலர்…

Read More

அளுத்கம கலவரம் ; பொலிஸாருக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

2014ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி இடம்பெற்ற அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் இந்த மனுக்கள் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தர்கா நகரினைச் சேர்ந்தவர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி…

Read More

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் – ரணில் உறுதி

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் சிறிகொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி தனக்கு வழங்கப்பட்டதாக ஆசாத் சாலி இணையத்திடம் தெரிவித்தார். முழு நாட்டிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே தனக்கு இவ்வாறு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக சொன்ன ஆசாத் சாலி, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உடனிருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி…

Read More

பெரோசா முசம்மில் வேட்பு மனுவில் கைச்சாத்து

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பெரோசா முசம்மில் இன்று சிறிக்கொத்தவில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டாா். அருகில் பெரோசாவின் கணவா் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மில்  மற்றும் ஆதரவாளர்கள் காணப்படுகின்றாா்.

Read More

ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது நோக்கம்: மைத்திரி

2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது அரசின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹலால் வரியின்றி வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க முடியாது என கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இருந்து வந்த கருத்து இந்த நாட்டை மிகப்பெரும் தேசிய அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் எனவே ஹலால் வரி வருமானத்தை நீக்கி திறைசேரியை பலப்படுத்துவதை தமது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதி…

Read More

ஐ.தே.கவுக்கு ஆதரவு அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் ஆதரவு வழங்கவுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐக்கிய தேசிய கட்சி பரந்த கூட்டணியாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும். எனினும் யானை சின்னத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாதென பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தல் சின்னமாக யானையை பயன்படுத்துமாறு கட்சிக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைத்திடமும் கோரிக்கை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தபாய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன. எனினும், நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன். ஆனால், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு என்னை நான் அர்ப்பணிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

“கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்” நுால் வெளியீடு

– அஷ்ரப் . ஏ. சமத் – பி.அமல்ராஜின் “கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்”  தமிழ் தந்தியியல் வெளியான நீள் தொடாின் தொகுப்பு) நுால் வெளியீடு 12.07.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். காப்பியக்கோ டாக்டா் ஜின்னா சரிப்தீன் (துனைத் தலைவா்) கொழும்பு தமிழ்ச்சங்கம் அவா்கள் தலைமையில் நடைபெறும்.  வெளியீட்டுரை  கவிஞா் அஷ்ரப் ஷிகாப்தீன், புத்தக வெளியீடு முதல் பிரதி திரு. திருமதி பிரான்சீஸ்,  நுால் விமா்சனம்,  மு.தயாபரன்,  வரவேற்புரை கவிஞா்…

Read More

ஜொன்ஸ்டன், மகிந்தானந்த , ரோகித்த, பிரசன்ன போன்றோர் வேட்பு மனு தாக்கல்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா்களான ஜொன்ஸ்டன், மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த மற்றும் வசந்த விஜயவா்த்தன மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்க ஆகியோா்களுக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் நிதிமோசடிகள் ஈடுபட்டாா்கள் எனவும் இவா்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தும் நேற்று இவா்கள் வேட்பு மனுவில் கைச்சாா்த்திட்டுள்ளனா். வாஸ் குணவா்த்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா ஆகியோறுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படவில்லை

Read More

தேசிய பட்டியலில் பௌஸி – மைத்திரியினால் பரிந்துரை

சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பௌஸி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் முன்னள் அமைச்சர் பௌஸி நியமிக்கபட்டுள்ளதாக சுதந்திர கட்சியிடமிருந்து ஜப்னா முஸ்லிமுக்கு தகவல்கள் கிடைத்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பௌஸி தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். வழமையாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பௌஸி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More