Headlines

உலக முஸ்லிம்கள் ஒன்று பட்டு எழ வேண்டும் – பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுக்க முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு எழ வேண்டும் பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம் வேண்டு கோள்! இன்று பைத்துல் முகத்தஸில் தொழுகைக்காக சென்ற பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ்  துறைக்கும் இடையே மாபெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில்  ஸ்ரேலின் பொலிசார்  இறை இல்லத்திற்கு உள்ளேயே கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து புனித தலத்தின் புனிதத்தை சீர் குலைக்க முனைந்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பொலிசார்களை எதிர் கொண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள் பலர் காயமடைந்தனர்இந்த…

Read More

சிரிப்பு வரவழைக்கும் GASஐ சுவாசித்த வாலிபர் பலி

இங்கிலாந்தில் லாப்பிங் GAS (சிரிப்பை வரழைக்கும் GAS எனப்படும்) நைட்ரஸ் ஆசிட் மோகம் அதிகமாக உள்ளது. டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை இதை சுவாசித்து மிக மகிழ்ச்சியாகவும், பேரானந்தமாகவும் இருக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. நைட்ரஸ் ஆசிட் உடலில் இருக்கும் ஆக்சிஜனை செயல் இழக்க செய்து உயிரை இழக்க செய்கிறது. அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. லண்டனை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் நண்பரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார்,….

Read More

மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும்

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் முறையற்ற வளர்சிதை மாற்றங்கள் மட்டுமின்றி நரம்பியல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும்…

Read More

செல்பி எடுத்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள் சிலருடன் செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கால்டன் இல்லத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மேற்படி இளைஞர்களின் வற்புறுத்தலின் பேரில் செல்பி எடுத்து கொண்டதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு மஹிந்­தவே வித்­திட்டார் : விஜேதாஸ ராஜபக்ஷ

ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே வித்­திட்டார். அதனை எதிர் கொள்­வது ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு ஒரு­வி­ட­ய­மே­யல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தற்­போது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம்கொடுக்க அஞ்­சு­கின்ற போதும் கடந்த காலங்­களில் அவரே…

Read More

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடந்த…

Read More

ACMCயின் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் (photo)

– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் இடையில் கல்வீச்சு, கூச்சல் மற்றும் குழப்பத்தினால் பதற்றமான நிலைதோன்றியது. அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் கூட்டம் சற்று நேரம் தடைப்பட்டு பதற்றமமானதொரு நிலை ஏற்பட்டது. பின்னர் பொலிஸார்…

Read More

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு…

Read More

ரணில் பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் – றிஷாத்

– எஸ்.கணேசன் – திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் என்று கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் கூறினார்.அவர் ­வ­ழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது. கேள்வி: திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­ட்ட­தில்லை. இந்த…

Read More

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

சாய்ந்தமருது மண்ணிலிருந்து மரம் அடியோடு பிடுங்கப்படுகிறது

– நவாஸ் சௌபி – முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருந்த சாய்ந்தமருது மண் எதிர்வருகின்ற தேர்தலில் மரத்தை அடியோடு பிடிங்கிவிட்ட செய்தியை இந்த உலகிற்கு அறிவிக்கும். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனைத் தொகுதியும் படுதோல்வியடைவதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கும் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் 5 ஆம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். சனிக்கிழமை 25.07.2015 ஆம் திகதி சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட…

Read More

குருநாகல் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முஸ்லிம்கள் வபாத்.

இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் குருநாகலில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அனுராதபுரம், அசாரிகம பிரதேசத்தை  சேர்ந்த வாஹித் மவ்லவி, ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஜீப் ஒன்றுடன் மோதிய  போதே மேற்படி அசம்பாவிதம் இடம் பெற்றது எனவும், உயிரிழந்தவர்களில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் மற்றவர் ஒரு பிள்ளையின்…

Read More