Headlines

கட்டாரில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் வபாத்

கட்டாரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் என்பவர் உயிரிழந்துள்ளார். “Cuter pillar ” இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அது தவறி கடலுக்குள் வீழ்ந்ததில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் எனும் இளைஞரும் மற்றுமொரு இந்திய நபரும் பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இவர்களது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நல்லமல்கள் ஏற்கப்பட்டு சொர்க்கவாசிகளாக இவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Read More

ஹிஜாப் உடலை மறைக்கதான் அறிவை மறைக்க அல்ல : நோபல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்!

யெமன் நாட்டை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசுப் பெற்ற இஸ்லாமிய பெண்ணுமான தவக்குல் கர்மானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்:- “கல்விக்கும், அறிவுக்கும் நீங்கள் அணியும் ஹிஜாப் எப்படி பொறுந்துகிறது” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கர்மான் அவர்கள் “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத்துவங்கினர். எனது ஆடையும் மனிதன் பெற்ற உன்னதமான கலாச்சாரமாக கருதுகிறேன். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது ஆதி காலத்திற்கே செல்கிறான்” என்று பதிலளித்தார்….

Read More

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போதைய கட்டிடத்திற்கு வாடகை மற்றும் வரி செலுத்தப்படுவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இடமாற்றம் செய்யப்படவுள்ள பத்தரமுல்லை கட்டிடத்திற்கு வருடாந்தம் 50 இலட்சம் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும்…

Read More

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்திற்கு இயந்திரமாக செயற்படுகின்றவர்கள் மக்கள் எனவும், சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Read More

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

Read More

சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர்: கெஹெலிய

மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை”அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல…

Read More

வாகன நெரிசலினால் 397 பில்லியன் ரூபா நட்டம்!

நகரங்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசல் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 397 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வாகனத்தின் வேகமானது மணிக்கு 20 கிலோமீற்றரிலிருந்து 12 கிலோமீற்றர் வரை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பிரதான நகரமாக கொழும்பு விளங்குகின்ற போதிலும், அங்கு 68,000 பேர் சேரிபுர வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும், 500ற்கும் அதிகமான யாசகர்கள் காணப்படுவதாகவும், 16,000 நாய்கள்…

Read More

பஸ் கட்டணத்தை 6% அதிகரிப்போம்

தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன. பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. புகைப்பரிசோதனைக் கட்டணம், வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, புதிய வரிகளை அறிமுகம் செய்தமையால், பஸ்களை இறக்குமதி செய்யும் போது…

Read More

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யக்கா வங்குவ” திருப்பத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மேல் விழுந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, பஸ்ஸில் பயனித்த 22 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

பாரிசில் ஒபாமா – புதின் சந்திப்பு

பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். கடந்த வாரம் சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய பிறகு ஒபாமாவும் புதினும் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது புதினிடம் கொல்லப்பட்ட ரஷ்ய விமானிக்காக தனது இரங்கலை ஒபாமா தெரிவித்தார். துருக்கி ரஷ்யா…

Read More

எவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்: கூறுகின்றார் மஹிந்த

எங்­க­ளு­டைய வாழ்க்­கையில் மறக்­க­வேண்­டிய விட­யங்­களைப் போன்று நினைவில் வைத்­தி­ருக்க வேண்­டிய விட­யங்­களும் இருக்­கின்­றன. மறக்க வேண்­டிய விட­யங்­களை மரணத்த­றுவாய் வரைக்கும் கொண்­டு­ செல்ல முயற்­சிக்க கூடாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அங்­கொடை கொஹி­ல­வத்த கங்­கா­தி­லக்க விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், முப்­பது வருட யுத்தம் இன்று சில­ருக்கு மறந்­தி­ருக்­கின்­றது. யுத்­தத்தில் முன்­னின்று போரா­டிய இரா­ணு­வத்­தி­னரை…

Read More

வரவு செலவுத்திட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது! பாலித

அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நன்மையானது என்றோ தீமையானது என்றோ கூற முடியாது. எனினும் மக்கள் எதிர்பார்த்த சலுகைகள் நிவாரணங்கள் இதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை கிரமமான முறையில் மேற்கொள்ள வழியமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத்துறை சார் சமூகம் எதிர்பார்த்த நன்மைகளும் நலன்களும் கிடைக்கவில்லை. இதனை விடவும்…

Read More