Headlines

இதுவரை காலமும் எந்த அரசும் ஒதுக்காத நிதி கல்விக்கு

இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்  தெரிவித்தார். கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More

அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன்

இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது. பிர­புத்­துவ குடும்­பத்தை சேர்ந்­தவன் அல்ல. சாதா­ரண விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்­த…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு தமிழ் சங்கத்தில் கௌரவிப்பும் நுால் வெளியீடும்

– அஸ்ரப் ஏ சமத் – தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் நேற்று (21) சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியவாதிகள் ஊடகவியலாளா்கள் சமுகசேவையாளா்கள் கல்விமாண்கள் கௌரவிப்பு விழாவும் கவித்தீபம் நுஸ்றி ரஹ்மதுல்லாஹ் எழுதிய கடல் தேடும் நதி மற்றும் பேச மறந்த வாா்த்தை குறுந்திரைப்படம் வெளியீடு விழா நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வா்தத்க அமைச்சா் றிசாத் பதியுதீன், கலந்து கொண்டு நுால்பிரதிகளையும், கொளரவிப்புக்களையும் நடாத்தினாா். மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவா்களின் ஞாபகாத்த…

Read More

தட்டிக் கேட்கும் திராணி எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும்

– அஸ்ரப் ஏ சமத் – வெறுமனே உப்புச்சப்பு இல்லாத விடயங்களை பூதாகரப்படுத்தி முன்னுரிமை வழங்காமல் சமூக மாற்றத்திற்கு அவர்களின் எழுத்துக்கள் பயன்பட வேண்டும் என கைத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நுஸ்றி ரஹ்மத்துல்லாவின் கடல் தேடும் நதி கவிதை தொகுதி; வெளியீட்டு விழாவும் எழுத்தாளர் , கல்விப் பிரமுகர்கள் கௌரவிப்பு விழாவும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாடடில் கலைமகள் ஹிதாய றிஸ்வி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்…

Read More

மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் பட்டமளிப்பு விழா

– அஸ்ரப் ஏ சமத் – கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிபின் லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (21) சனிக்கிழமை இரவு வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வா்த்தக அமைச்சா் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதிகளாக , இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌவுசி, பிரதியமைசச்சா் அமீா் அலி, பாராளுமன்ற உறுப்பினகள் நவவி,…

Read More

அனானிமஸ் – ISIS இடையிலான சைபர் யுத்தம் உச்சகட்டம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கை என சில தினங்களுக்கு முன் ‘அனானிமஸ்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த செவ்வாய்கிழமை ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 900 பயனாளர்களை டுவிட்டரிலிருந்து துரத்தியடித்தனர். அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டனர். இதைத்தொடர்ந்து ‘அனானிமஸ்’…

Read More

கண்ணீர் வரவழைத்த புகைப்படம்..!

யூத பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஷஹீதான, தன் குழந்தையின் உடலை புதைக்கும் தருவாயில் பிரிய மனம் இல்லாமல் குழிக்குள் இறங்கி கட்டிபிடித்து கதறியழும் பாலஸ்தீன தந்தை, யா அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிழும் மறுமையிலும் நன்மை செய்வாயாக, குழந்தை செல்வங்களில் பரகத் செய்வாயாக, நியாய தீர்ப்பு நாளில் இவர்களுக்கு இதற்க்கு பகரமாக சுவனத்தை தருவாயாக.

Read More

சீன கோடீஸ்வரரை செவ்வி கண்ட ஒபாமா

ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான்  செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள்,  ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும்…

Read More

கூகுள் தேடுபொறியில் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic  என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை பார்வையிட முடியும். இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த…

Read More

தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் (Live)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. 04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும். 04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு. 04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம். 04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி. 04.09 PM…

Read More