சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) மாலை காலஞ்சென்ற சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு கொழும்பு சுலைமான் டெரஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) மாலை காலஞ்சென்ற சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு கொழும்பு சுலைமான் டெரஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. மும்பையில் உள்ள புனித சேவியர் உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சகில்(14). கஞ்ஜூர்மர்க் பகுதியைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதற்காக நாகூர் ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். திடீரென விசித்திரமாக எதையோ யோசித்த சகில், ஸ்டேஷனில் நின்றிருந்த ரெயிலின் கூரை…
எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது காணாமல் போய்விடும். இப்படி மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் எரிநட்சத்திரத்தை தனது காரில் உள்ள முன்பக்க கேமரா (dashcam) மூலம் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் யூ-டியூபில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ 26 லட்சம் பேரைக்…
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் (‘மிண்ட்ஸ்’ – புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது…
– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….
பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது…
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக சென்ற இலங்கை படையினரில் இதுவரை ஏழுபேர் உயிர் நீத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் சிறுவர் நல அதிகாரி கே.ரவீந்திரன் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் தினவிழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இதனை தெரிவித்தார். ஐ.நா.அமைதி காப்பு சமாதான பணிகளில் 1200 இலங்கை படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஹெயிட்டி, தென்சூடான், மத்திய ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைதிகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்…
இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்….
தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. ஜெய்னுப் ஆப்தீன் திட்டமிட்டபடி இலங்கை வருவார் SLTJ அறிவித்துள்ளது. இதுபற்றி ஜமாத்தின் துணைச்செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில், பீ.ஜே. இலங்கை வருவதற்கான அத்தனை சட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவர் நிச்சயம் இலங்கை வருவார். குறிப்பிட்டபடி நிகழ்வுகளில் பங்கேற்பார். அதில் எத்தகைய மாற்றமும் கிடையாது. கடந்த காலங்களில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்போதும் அப்படித்தான். நாம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுபவர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே…
பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடாகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஊடகப் பயிற்சிபாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப் பயிற்சியை பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து நடத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒற்றை நாள் பயிற்சி முகாம் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும்…
அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….
ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். “எவன்கார்ட்” விவகாரத்தைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற எவன்கார்ட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்…