Headlines

நாம் ஏனைய அரசாங்கங்களைப் போன்று செயற்படவில்லை

கடந்த அரசாங்கங்களைப் போன்று அல்லாது நாம் மக்கள் கேட்பதனைக் கொடுப்போம் என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாம் ஏனைய அரசாங்கங்களைப் போன்று நாம் செயற்படவில்லை, மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். வீடுகள், உட்கட்டுமான வசதிகள், தொழில் வாய்ப்பு உள்ளிட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். வரவு செலவுத் திட்டத்துடன் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை வரையறுப்போம். அதன் மூலமாக மக்களுக்கு…

Read More

தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது

பழைய தவறுகளுக்கு தண்டனை விதித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எமது நாட்டில் 30 ஆண்டுகள் போர் இடம்பெற்றது. போர் இடம்பெறும் போது அனைத்து விடயங்களும் சட்ட ரீதியாக நடைபெறாது. இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சிங்களம் தமிழ் என்று பேதமில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மீளவும் இதயங்களை குரோதம் ஏற்படாத வகையில் தேசிய…

Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்

மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அடுத்த ஜன­வரி மாதத்­திற்குள் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­படும். இது தொடர்பில் நில­விய அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸ­ன­ யாப்பா தெரி­வித்தார். அர­சியல் மாற்­றத்தின் கார­ணத்­தி­னா­லேயே இவ்­வி­ட­யத்தில் கால­தா­மதம் ஏற்­பட்­ட­தா­கவும் அமைச்சர் சபையில் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கண்டி மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. வேலு­கு­மா­ரினால் மீரி­ய­பெத்தை மற்றும் மலை­யக மண்­ச­ரி­வுகள் தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்தி வைப்பு பிரே­ர­ணைக்கு பதி­ல­ளித்து சபையில் உரை­யாற்றும் போதே…

Read More

ஐ.நா குழு இலங்கைக்கு வருகை

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள். இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை தேடிப்பார்க்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் விஜயம்…

Read More

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை?

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே. நாராயணன்  தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் குறித்து இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது!– ரவி

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன…

Read More

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இன்று,  வெள்ளிக்கிழமை (6) ஜும்மா தொளிகைக்கும் பின், மருதானை பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி பலஸ்தீன  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாத சட்டவிரோத இஸ்ரேலுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகல முஸ்லிம்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ஜம்மிய்யதுல் உலமாவுக்கு, சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில்…!

தலைவர்  / செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10 நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!! அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில்…

Read More

PJ வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை

1437-01-22 2015-11-05 தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது. கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக ஜெமீல் நியமனம்

– எம்.வை.அமீர் – கிழக்குமாகாணசபையின் முன்னாள் குழுக்களின் தலைவரும், தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிஷாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை

– அஸ்ரப் ஏ சமத் – சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது. குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின்…

Read More