Headlines

23 வயது இளைஞரை கடத்திய 25 வயதான யுவதி கைது!

23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார். இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்

Read More

வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை

– எம்.றொசாந்த் – வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

Read More

 ‘திருமணமாகாமலே 1,000 பேர் கருக்கலைத்து கொள்கின்றனர்’

5-20 சதவீதமானவர்கள் உயிரிழப்பு 240,170 பேர்  கலைத்துக்கொள்கின்றனர் ஊவாவிலேயே அதிகமான கருக்கலைப்பு கவிதா சுப்ரமணியம் – திருமணம் முடிக்காமலே, நாளொன்றுக்கு 1,000 பேர் சட்டவிரோதமான முறையில் கருவைக் கலைத்துக்கொள்கின்றனர் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ‘133 வருடங்களுக்கு முன்னரான சட்டத்தை, இன்னும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அச்சட்டத்தில், கர்ப்பம் தரித்த தாயொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரமே கருக்;கலைப்புச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார். கருக்கலைப்பினால் ஏற்படும்…

Read More

சைபர் தாக்குதல்: இலங்கையர்கள் எண்மர் அடையாளம்

பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடுவலை சுது கைது

பாதாள உலக தலைவர் கடுவலை வசந்த என அழைக்கப்படும் பல கொலைகளுடன் தொடர்புடைய நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை சுது என அழைக்கப்படும் பெல்லகே சுதத் கித்சிறி என்ற பாதாள உலக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை கொத்தலாவல, பங்களாவத்தை பிரசேத்தில் வைத்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!

வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான டக்ளஸ்…

Read More

இரு பொலிஸார் மீது அசிட் வீச்சு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு…

Read More

புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது. பிறைந்­து­ரைச்­சேனை முகைதீன் பள்­ளி­வீ­தியில் வசிக்கும் 50 வயது நிரம்­பிய குடும்­பஸ்­தரே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ராவார். சம்­பவ தின­மான அன்று குறித்த தந்­தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காண­வில்லை என்றும் இறு­தி­யாக பக்­கத்து வீட்டின் கூரையில்…

Read More

கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்று வீடு திருப்பாமையினால் பெற்றோர் அவரை தேடிய போது பாடசாலைக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மேலும் குறித்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான். பொலிஸார் சம்பவம்…

Read More

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது

கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: மட்டக்களப்பில் சம்பவம்

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More