Headlines

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அமைச்சர் றிஷாத் அவசர கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை கையாலவென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முக்கியஸ்தர்களான அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள தனித்தனிக் கடிதத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். அப்பாவிகளான இந்த கைதிகள் சந்தர்ப்பவசத்தால் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டவர்களாக இருக்கலாம். அத்துடன் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு…

Read More

முகத்தைக் கடித்ததாலேயே சேயாவைக் கொன்றேன்! கொண்டயாவின் அண்ணன் வாக்குமூலம்

துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கொண்டயாவின் அண்ணன் தெரிவித்துள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தெவ்மியின் படுகொலை தொடர்பில் தற்போது கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த, அவரது அண்ணன் சமன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சேயாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் தலைமுடி என்பவற்றோடு சமன் ஜயலத்தின் டி.என்.ஏ. பொருந்துவதாக நேற்றுநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்றைய தினம் கொண்டயாவின் சகோதரர்…

Read More

27 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி  மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் நேற்று (14) மாலை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதுடன், அபிவிருத்தி விடயங்கள், மக்களது பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

ரயிலில் பிச்சை எடுப்பது தடைசெய்யப்படுகிறது!

ரயில்களில் பிச்சை எடுப்பது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. ரயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர் மரணம்!

சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று அதே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான நக்ஷலா ரஷ்டீன் என்ற இளம் பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது பெற்றோர் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவர் சிலாபம் வைத்தியசாலையின் 8வது பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இதனையடுத்து ஏனைய மருத்துவர்கள்…

Read More

2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள்

2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன.

Read More

வெள்ளவத்தையில் தீ!

வெள்ளவத்தை – இராமகிருஷ்ண மிஷன் சந்தியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தீ பரவியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை!

தற்போதைய அரசில் உள்ள குற்றச்செயல்கள் புரிவாராயின் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான சந்திப்பில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா…

Read More

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில்…

Read More

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00…

Read More