Headlines

“நான் என்றும் அகமதுக்கு ஆதரவாக நிற்பேன்” – ஒபாமா

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான்…

Read More

முஸ்லிம் என்பதால் கைதுசெய்யப்பட்ட 14 வயது மாணவன்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் இர்விங்கில் வசிக்கும் அகமது முகமது.. 14 வயதுச் சிறுவன். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். எலெக்ட்ரானிப் பொருட்களை புதிது புதிதாக வடிவமைப்பது அவனுடைய பொழுது போக்கு. கடந்த திங்கள் கிழமையன்று தான் லேட்டஸ்டாக வடிவமைத்த எலெக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் அகமது. அவனது வகுப்பாசிரியரிடம் சென்று காட்டியவுடன், “நன்றாக இருக்கிறது. ஆனால் வேறு யாரிடமும் இதைக் காட்ட வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு…

Read More

ஐ.நாவின் விசாரணை அறிக்கை

ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை,…

Read More

நீதி பெற்றுத் தாருங்கள் ;ஜெனீவா சென்ற முஸ்லிம் தாய் (video)

2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர்  வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Read More

எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – நாம் மட்டும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான…

Read More

அமான் அஸ்ரப் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் (Photo)

– அஸ்ரப் ஏ சமத் – மறைந்த தலைவா்  எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு  கொழும்பு  திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில்  தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா்.  இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.

Read More

மாதாந்த சம்பளத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கிய அமைச்சர் றிஷாத்

– எஸ்.எச்.எம்.வாஜித் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான இன்று (16)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார். இவ்வாறான சதகத்துல்…

Read More

ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தவறான உரை: அதிபர் உடல்நிலை பற்றி எதிர்க்கட்சிகள் சந்தேகம்

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் துவக்க உரை நிகழ்த்திய  ஜிம்பாவே நாட்டு அதிபர் ராபர் முகாபே, ஒரு மாதத்திற்கு முன்பு படித்த உரையை மீண்டும் படித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதிபர் ராபர் முகாபே தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு தவறான பழைய உரையை படிக்க ஆரம்பித்ததும், தொலைக்காட்சியின் நேரடி ஒலிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர் வாசித்த உரையானது கடந்த மாதம் ஆற்றிய உரையாகும்.  அதிபரின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே தவறு…

Read More

பின்லேடன் தம்பி கட்டுமான நிறுவனத்துக்கு தடை – சவூதி அரேபிய மன்னர் உத்தரவு

சவூதி அரேபியாவின் புனித மக்காவில் கடந்த 12-ந்தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. அதில், கட்டிடம் இடிந்து அங்கு மழைக்கு ஒதுங்கிய யாத்திரீகர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு  சவூதி  அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்து உள்ளார். மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் விரிவாக்க கட்டுமான பணியில் `தி  சவூதி  பின்லாடின் குரூப்’ ஈடுபட்டுள்ளது. இது அல்கொய்தா தலைவர்…

Read More

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கான, பழைய மாணவர் சங்கத்தின் தேவை…!

– முஸ்தபா முர்ஸிதீன், ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்- ஒரு பாடசாலைக்கு, அதன் வெற்றிக்கு பழைய மாணவர் சங்கம் என்பது இன்றியமையாத ஒன்று. இன்று இலங்கையிலும் சரி உலகிலும் சரி மேலோங்கி நிற்கின்ற பாடசாலைகளின் பல்வேறு தேவைகள்; பௌதீக, மனித வளம் சார்ந்தவை, அப்பாடசாலைகளின் பழைய மாணவர்களினாலே பூர்த்தி செய்யப்படுகின்றன. இது இவ்வாறிருக்க எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலே பெயர் பதித்து நிற்கின்ற மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு ஒரு பலம் வாய்ந்த பழைய மாணவர் சங்கம் இல்லை…

Read More

ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து பதற்றமில்லை : ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர், ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டு மற்றம்…

Read More

5வயது சிறுமி படுகொலை: விசாரணை சி.ஐ.டியிடம்

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 5 வயதான  சிறுமியின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார். கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை…

Read More