Headlines

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொர்பில் 24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், 1929 மற்றும் 1938 போன்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக முறையிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த சேவையானது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரமே செயற்பட்டதாகவும் தற்போது…

Read More

பரிந்துரைகள் பாரதூரமானதாக அமையாது பிரதி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் விசா­ரணை அறிக்­கையில் பார­தூ­ர­மான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டாலும் பரிந்துரைகள் பார­தூ­ர­மாக அமை­யாது. பார­தூ­ர­மான அத்­து­மீறல் விசா­ரணைகள் வலி­யு­றுத்­தப்­படமாட்­டாது என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது என பிர­திவெளி­வி­வகார அ­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக சந்­தே­கங்­களை தீர்க்க அர­சாங்கம் செயற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கை­ மீ­தான விசா­ரணை அறிக்கை பார­தூ­ர­மான வகையில் அமையும் என…

Read More

இலங்கை குறித்த அறிக்கை பயங்கரமானதாகவே அமையும் – உதய கம்­மன்­பில

இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை வெளி­யிடும் விசா­ரணை அறிக்கை இலங்கை இரா­ணு­வத்தை பழி­தீர்க்கும் வகையில் அமையும். அதேபோல் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என நம்­பு­வ­தாக தூய்மையான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தை சர்­வ­தேச அரங்கில் தீர்க்க முயற்­சிப்­பது ஏன்? தமிழர் பிரச்­சி­னைக்கு புதிய அர­சியல் அமைப்பு எதற்­காக? இப்­போ­தி­ருக்கும் அர­சியல் அமைப்பின் மூலம் தீர்க்க முடி­யாத தமிழ் மக்­களின் பிரச்­சினை என்ன? எனவும் அவர் கேள்வி…

Read More

இலங்கை குறித்த விசாரணை அறிக்கை இன்று ஜெனிவாவில் வெளியீடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஐகிகிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். இந்த விசாரணை அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் படி ஐந்து நாள்…

Read More

கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல  வாக்கு மூலம் வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகம் ஒன்றில் கட்டணம் செலுத்தாது விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சங்கக்கார இல்லாதது நட்டமாகும் – நரேந்திர மோடி கவலை

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலேயே மனிதர்கள்- மனிதர்களுக்கு இடையில் உறவை தக்கவைத்து கொள்வதற்காக முயற்சிப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, கிரிக்கெட் மைதானத்தில் இல்லாமையானது எங்கள் எல்லோருக்கும் நட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைய்தராபாத்தில் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சில காலத்துக்கு…

Read More

மரண தண்டனையை அமுல்படுத்த, ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க

மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான, ஒருநாள் பயிற்சிப் பட்டறை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களுக்குமான ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ‘விடியல் ஸ்ரீலங்கா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல், தகவல் அறியும் சட்டமூலம், அறிக்கையிடலுக்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் ஆகிய தலைப்புகளிலும் விரிவுரைகள்…

Read More

தந்தை ஆசைப்பட்ட அமைச்சு, மகனுக்கு கிடைத்தது

தந்தை எதிர்பார்த்த அமைச்சுப் பதவி எனக்கு கிடைத்துள்ளதாக பெருந்தேட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் காணி மற்றும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என நவீன் திஸாநாயக்க தலவாக்கலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தனது தந்தை காமினி திஸாநாயக்க இந்த அமைச்சு பதவியை எதிர்பார்த்திருந்தார். அந்தக் காலத்தில் காணப்பட்ட மிகவும் பலம்பொருந்திய அமைச்சு பெருந்தோட்டத்துறை அமைச்சாகும்….

Read More

விசாரணைகள் பூர்த்தி.. ஜனாஸாவை நல்லடக்கம் செய்யப் படுகிறது

ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர். கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா…

Read More

இவரது மரண நாளே இவர் செய்த நல்லறங்களை சுட்டி நிற்கின்றது

– துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை கருதிய எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி அவர்களினை புறமுதுகில் குத்தி வீழ்த்தி இருந்தனர்.அவ்வாறே மரணித்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் மரணமும் நிகழ்ந்தது எனலாம்.மரணத்தின் காரணங்கள் இயற்கை போன்று ஜோடிக்கப்பட்டாலும் அதில் சில மர்மங்கள் பொதிந்திருப்பதனையும் யாரும் மறுக்க முடியாது. “அன்வர் இஸ்மாயிலிற்காய் மாடு அறுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது” என்ற…

Read More