Headlines

வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா்

– அஸ்ரப் ஏ சமத் – வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். இம் மக்கள் யுத்தத்தின்பின் முகாம்களில் முடக்கப்பட்ட மக்களாகும். அரசு வடக்கில் அகதி முகாம்களில் வாழும் பெண்கள் தமது காணி பமிகள் மீள பகிா்ந்தளிக்கப்பட வில்லை. கடந்த 30 ஆண்டுகளில் 1 குடும்பமாகிய மக்கள் தற்போது 3அல்லது 4 குடும்பங்களாக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் முகாம்களில் வாழ்வது இம் மக்களுக்குரிய காணிகளை பாதுகாப்பு படையினா் இன்னும் அவா்கள் முகாம்களாக வைத்துள்ளனா். அவா்கள்…

Read More

SLTJ யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வு மாற்று மத நண்பர்கள் புகழாரம்

நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம க்ரீன் வீச் ஹோட்டலில் வைத்து இதே நிகழ்ச்சி நடைபெற்ற போது, பொது பல சேனாவின் காடையர்கள்…

Read More

ஊடகவியலாளர் பிரியந்த யானை தாக்கி உயிரிழந்தது இவ்வாறுதான்

மின்னேரியா கிராமங்களில் யானைகள் புகுந்து நாசம் விளைவிப்பது தொடர்பாக செய்தி திரட்டச் சென்ற பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் யானை தாக்கி நேற்று அதி காலை உயிரிழந்துள்ளார். 46 வயதான பிரியந்த ரத்நாயக்க என்பவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராமத்திற்குள் புகுந்த யானையை வீடியோ செய்ய முற்பட்ட போது திடீரென வந்த யானை ஊடகவியலாளரை தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயங் களுடன் காணப்பட்ட இவர் ஹிங்கு ராக்கொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவருடன் வேறு…

Read More

கோத்தபாயவின் ஆசனத்தில் அமரமாட்டேன் : சரத் பொன்சேக்கா

பாதுகாப்புச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பதவி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று  இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக இராணுவத்தை விட்டு தப்பியோடி, பின்னர் தமையனின் செல்வாக்கை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த ஒருவரது ஆசனத்தில் தான் அமரமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பீல்ட் மார்ஷல் எனும் உயரிய பதவியின் கௌரவத்தை தான்…

Read More

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டாயம் – ஜேர்மன்

20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில் பங்கெடுத்தார். ஜெர்மன் நிதி அமைச்சரின் கருத்து மாநாட்டில் பலரையும் கவரும் விதத்தில் இருந்தது ஜெர்மன் நிதி அமைச்சர் தனது உரையில் உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது . உலக…

Read More

உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதி!

நீங்கள் படத்தில் பார்க்கும் திருமறை குர்ஆனின் பிரதி தான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாகும். இதற்கு முன்பு ரஷ்யாவின் ததாரிஸ்தானில் இருந்து வரும் இரண்டு மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட திருமறை பிரதிதான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாக கருத பட்டது. தற்போதைய புதிய பிரதி 500 கிலோ  கிராமை கொண்டதாகும். 2.28 மீட்டர் நீளத்தையும் 1.55 மீட்டர் அகலத்தையும் கொண்ட 218 பங்கங்களை கொண்டு இந்த பிரதி தொகுக்க பட்டுள்ளது….

Read More

தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார்

தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார் இலங்கை அரச தலைவர்கள் அழைத்தால் அங்கு அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தான் தற்போது தயாராக இருப்பதாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது இலங்கை அதன் சொந்த ன கடின உழைப்பு மூலம் தன்னு டைய சிக்கல்களை தீர்ப்பதற்குப் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குச் சிறந்த மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி…

Read More

இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி

அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார். இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார். இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பணிநீக்கம்…

Read More

கெஹலிய பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரவுக்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார். செலசினே நிறுவனத்தில் இடம்பெற்ற பொலிஸ் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யவே இவர்  நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்’: சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார். சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள்  துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன. இந்நிலையில் துருக்கி…

Read More

பேராதனை பல்கலைகழக முதற்கலை வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More

முறை தவறி நடக்கும் மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் இன்றுடன் (08) நிறைவடையவுள்ளது. பரீட்சை இறுதிநாளான இன்று பாடசாலைகளின் உள்ளேயும் வௌியேயும் ஒழுக்கத்தைப் பேணுமாறும் அவ்வாறு தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அவ்வாறு முறைதவறி நடக்கும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார். கடந்த வருடம் மாணவர்கள் முறைகேடாக நடந்தமையினால் இவ்வருடம் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பாடசாலை வளாகத்தினுல் முறைதவறி நடக்கும் மாணவர்களின் பெயர்விபரங்களை தனக்கு அனுப்பி…

Read More