அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு
அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டப்புற லயம் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்கவுள்ளோம் என மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது மலையகத்திற்கு எந்தவொரு அபிவிருத்தியையும் கொண்டுவராத அராஜகப் போக்கிலான அரசியலை நாம் மீண்டும் தொடரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றதன்…
