Headlines

“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி

“எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது…

Read More

ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான  ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலஸ்தீன பூமியான ஜெருசலத்தை, இஸ்ரேலாக அங்கீகரிக்கும் இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும்…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் சிறந்த முறை­யாகும்….

Read More

“ஷரியா வங்கி முறையை தடை செய்” -பொதுபல சேனா

இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அந்த அமைப்பின் தலைவர் திலந்த வித்தானகே இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஷரியா வங்கி இலங்கையில் வேகமாக பரவி வருகின்றதாக கூறிய வித்தானகே இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார். பொருளாதார நடவடிக்கைகளுக்கு…

Read More

முஸம்மில் இனவாதக் கருத்துக்களை உடன் நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும், முஸ்லிம் சமூதாயம் தொடர்பாக இனவாதிகளின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கின்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஹம்மட் முஸம்மிலுடைய தலைவர் விமல் வீரவன்சவின் முஸ்லிம் விரோத கருத்துக்களை…

Read More

தேர்தல் ஆணையாளருடன் பொதுபலசேனா பேச்சு

பொதுபல சேனா இயக்கம்தனியான ஓர் அரசியல் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே ஆகியோர் தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வடக்கு மாகாணத்தை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் வேட்பாளர்களை களமிறக்க பொதுபல சேனா திட்டமிட்டுள்ளது.

Read More

சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : யாழில் பதற்றம்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்  யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிய  வேளையில் நள்ளிரவு…

Read More

20 ஆம் திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது : மனோ கணேசன்

பிரதமரினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ஆம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம்  75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்காது என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, எங்கள் கூட்டணியின் கடும் எதிர்ப்பை நமது பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்து கூறியுள்ளார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

Read More

வயது முதிர்ந்த ஆலிம்களின் விபரம் திரட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழு சமய, சமூகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து 63 வயதைத் தாண்டியுள்ள ஆலிம்களை கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் விபரங்களைத் திரட்டி வருகின்றது. இது தொடர்பில் ஜம்இய்யா தனது மாவட்ட, பிரதேசக் கிளைகளுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து மேற்படி உலமாக்களின் விபரங்கள் வந்துள்ள போதிலும் இன்னும் பலருடைய விபரங்கள் வர…

Read More

1875 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட இலங்கை முத்திரைகள், புத்தகங்களாக வெளியாகிறது

1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து-  மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த காலப்பகுதியில் வௌியிடப்பட்ட அனைத்து முத்திரைகளின் புகைப்படங்களும் அவற்றுக்கான தொழில்நுட்ப தகவல்களும் இத்தொகுப்பில் வௌியிடப்படவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச முத்திரை  ​சேகரிப்பாளர்களுக்கு இலங்கையில் வௌியிடப்பட்ட முத்திரைகள் தொடர்பான தௌிவான தகவல்களை பெற்றுக்ெகாள்ளும் நோக்கிலும் பாடசாலை நூலகங்களுக்கு பயனளிக்கும் நோக்கிலும் இந்த முத்திரை தகவல் அடங்கிய குறித்த தொகுப்புகள் …

Read More

“மக்கள் உரிமையே எமது கட்சியின் குறிக்கோள்” அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)

நேர்காணல் – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மைச்சர் றிஷாத் அவருடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாணத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வது சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களின் காணொளி. வீடியோ :-                       நன்றி நவமணி

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ சவூதி மன்னர் – மலைசிய பிரதமர் கூட்டு

 சையது அலி பைஜி மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த நட்புறவில் இருக்கும் நாடன மலைசியாவுடன் பல ஒப்பந்தங்களை சவுதி அதிகாரிகள் இறுதி செய்தனர். சவூதி மன்னர் சல்மானோடு மலைசியாவின் பிரதமர் நஜீப் நடத்திய பேச்சு வார்த்தையின்போது ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர் கொள்வதில் மலைசியாவும் சவூதி அரேபியாவும் ஒருங்கிணைந்து செயலாற்றும் என்று சவுதி மன்னர் சல்மானும்…

Read More