மறிச்சுக்கட்டியா அல்லது வில்பத்துவா?
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், புத்தளம் மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி, மறிச்சுக்கட்டியா அல்லது வில்பத்துவா என்று தெளிவாகத் தெரியாமல், தென்பகுதியில் உள்ள சில பௌத்த தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களுமாகிய சுற்றுச் சூழலியலாளர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பிரதேசம் மறிச்சுக்கட்டிதானா அல்லது வில்பத்துதானா என்று உண்மையிலேயே தெரியாமல்தான் அவர்கள் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாமல் இருக்கின்றது. ஏனெனில், அந்தப் பிரதேசத்திற்குத் தாங்கள் சென்று நேரில்…
