Headlines

மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா?

மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில், புத்­தளம் மாவட்­டத்தின் எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள ஒரு குறிப்­பிட்ட பகுதி, மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா என்று தெளி­வாகத் தெரி­யாமல், தென்­ப­கு­தியில் உள்ள சில பௌத்த தீவி­ர­வா­தி­களும், அவர்களின் ஆத­ர­வா­ளர்­க­ளு­மா­கிய சுற்றுச் சூழ­லி­ய­லா­ளர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்தப் பிர­தேசம் மறிச்­சுக்­கட்­டி­தானா அல்லது வில்­பத்­து­தானா என்று உண்­மை­யி­லேயே தெரி­யா­மல்தான் அவர்கள் தீவி­ர­மான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று கூற முடி­யாமல் இருக்­கின்­றது. ஏனெனில், அந்தப் பிர­தே­சத்­திற்குத் தாங்கள் சென்று நேரில்…

Read More

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

அம்பாறை, அட்டளைச்சேனை கோணாவத்தை கடற்கரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரினால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை எட்டாம் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகாமையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் முன் டயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக இரவு 8.15 மணியளவில் சைக்கிளின் முன் டயரினைக் கழற்றி திருத்துவதற்காக உரிமையாளர் கொண்டு சென்ற போது பாதையோரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது….

Read More

தேநீர் விஷமானதில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – பிட்ரத்மலை தோட்டத்தில் 50 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் தேயிலை பறி;த்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று மதியம் அருந்திய தேநீர் விஷமானதினாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். tksvk

Read More

இரவு உணவில் எதையெல்லாம் தவிக்கணும் ..எதை சாப்பிடலாம்..?

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி…

Read More

வெள்ளை மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பத்திரிகையாளர்களின் அறையில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த ரகசிய பிரிவு போலீசார் நிருபர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஈசன்ஹவர் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்….

Read More

நாஜி ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட 102 வயது பெண்மணிக்கு பி.எச்.டி பட்டம்

ஜெர்மனியை சேர்ந்தவர் இன்ஜ்போர்க் ஸில்ம் ரபோபோர்ட். தற்போது இவருக்கு 102 வயது ஆகிறது. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணரான இவர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொண்டார். அப்போது ஜெர்மனியை ‘நாஜி’ படைகள் ஆட்சி செய்தன. இவர் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது முயற்சி தடைபட்டது. இதற்கிடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் அங்கு நாஜிக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இவர் தொடர்ந்து பி.எச்.டி. பட்டம்…

Read More

சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் நேற்று (09) பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார். புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கல் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் நேற்று  (09) புலியாந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளுக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பொண்டுகல்சேனை பகுதியில் இம்…

Read More

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் கருவறை புகைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள்

Read More

உலக தராதர அங்கீகார தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில்;கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொன்டபோது.

Read More

சிங்கபூரிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து சிங்கபூரிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,அதன் பெறுமதி 53 இலட்சத்து 38 ஆயிரத்து 136 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது – தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான  வட்டாரங்கள் தெரிவித்தன. நாயினதீவு பிரதேசத்தைச்  …

Read More