Headlines

அப்துல் கலாம் வருகிறார்; இலங்கைக்குதான்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பை கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தலைமைத்துவத்திற்கு தகுதியான சவூதி மன்னர் சல்மான் …!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அண்மையில் மொராக்கோ நாட்டு மன்னர் வருகை தந்தார். அவரை வரவேற்க மன்னர் சல்மான் விமான நிலையம் சென்றார். இருவரும் சந்தித்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் முந்திக்கொண்டு படம் பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்பத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரியை பணி நீக்கம் செய்து வேறு ஒரு அதிகாரியை அதிரடியாக நியமித்தார்…

Read More

வெள்ளிக்கிழமை 2 இலட்சம் கையெழுத்து வேட்டை

 – வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி – வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது. வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT),  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்…

Read More

மபாசா பள்ளிவாசல் மூடலும் பொத்துவில் சகோதரர்களின் முயற்சியும் (Photo)

-கபூர் நிப்றாஸ்-  கடந்த மாதம் 28 ஆம் திகதி சட்டரீதியாக மூடப்பட்ட பொத்துவில் 5 பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலினை மீட்பதற்கு அதன் நிருவாகம் பல முயற்சிகளை எடுத்தது, இருந்தும் அம்முயட்சிகளுக்கு பயன் கிடைக்காமல் போனது. . எதிர்வரும் ரமழானில் பொதுமக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற கட்டாய தேவையாக இருந்த இந்த பள்ளிவாயலினை வேறு ஒரு இடத்தில் அமைப்பதாக நிருவாகம் முடிவு செய்தது , தற்போது அதற்கான வளவு பள்ளிவாயளிட்காக வாங்கப்பட்டுள்ளது.  அதில் முதற்கட்டமாக தற்காலிக கட்டிடம்…

Read More

வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்

– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…

Read More

கட்டார் உலகக் கோப்பைத் தொடரை நடத்தத் தடையில்லை – FIFA

சமீபத்தில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி உலகப் புகழ் பெற்ற காற்பந்து போட்டியைக் கொண்டு நடத்தும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA இன் முக்கிய சில உறுப்பினர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசியல் வாதிகள் 2010 உலகக் கோப்பையைத் தமது நாடு தலைமை தாங்குவதற்கு சார்பாக வாக்களிக்க கோடிக் கணக்கில் இலஞ்சம் அளிக்கப் பட்டதாகக் கசிந்த தகவலாகும். இந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய சில முக்கிய FIFA அதிகாரிகள் சிலர் கைது செய்யப் பட்டு அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில்…

Read More

சிறை செல்வதற்கும் தயார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்!!!

-SLTJ ஊடகப் பிரிவு- ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று 11.06.2015 கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி…

Read More

குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்

வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் சூரத் நகரில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் பிறந்த அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் அந்த குழந்தை சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள்…

Read More

சனத் ஜெயசூர்யா உட்பட நான்கு பிரதியமைச்சர்கள் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பிரதியமைச்சர்கலாக நியமனம் பெற்றுள்ளனர். சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே பிரதியமைச்சர்கலாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளதனர்.

Read More

“ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, வாபஸ் பெறுமாறு மைத்திரி கேட்கவில்லை”

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கேட்கவில்லை என மறுத்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ஆதரவு எம்.பி.யுமான  தினேஷ் குணவர்தன பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு போதும்  வாபஸ் பெறப் போவதில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (10) பிரதமர்  மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேராவால்  வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார் தினேஸ் குணவர்தன எம்.பி.tks

Read More

தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய…

Read More