Headlines

கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார  சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச,  அமைச்சா் கபீா் காசீம், பிரதியமைச்சா்  சம்பிக்கா பிரேமதாச ஆகியோறும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

Read More

‘ஜனாதிபதி மைத்திரியின் இதயம் பலமானது’

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கும் போது, கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா? பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து…

Read More

கடந்த ஆண்டு ஆறு கோடி பேர் அகதிகளானார்கள்: ஐநா

உலக அளவில் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் போர்கள் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதையும்விட மிக அதிகபட்சமாக உயர்ந்திருப்பதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஆறுகோடி பேர் உலக அளவில் இப்படி பலவந்தமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஐநா மன்றம் கணக்கிட்டுள்ளது. இப்படியான அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் சிறார்கள். சிரிய மோதல்களில் தான் அதிகபட்சமானவர்கள் இப்படி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நாடுகளின் அரசாங்கங்கள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தமாத்திரத்தில்…

Read More

ரமழான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு!

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களுடைய அண்டை வீடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, லக்னெüவில் புந்தேலி சமாஜ் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரா பட்கர் கூறியதாவது: “மஹோபா நகரில் உள்ள உதால் செக் பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமூகத்தினருடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளோம். 60 நபர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேரி, இஃப்தார்…

Read More

பெரும்பாண்மை இன சகோதரர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு!

அகமட் எஸ். முகைடீன் அம்பாறை மாவட்டத்தின் தமன, உகன, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா போன்ற பிரதேசங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக செயற்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அரசியல் பயணத்தில் (18.06.2015) இணைந்து கொண்டனர். மறைந்த பெரும் தலைவர் இன மத வேறுபாடு கடந்து தேசிய ஐக்கிய முன்னணியினை உருவாக்கி சகல இனத்தவரையும் ஒரு…

Read More

ரமழானை முன்னிட்டு 113 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் ஜெயில் துணை சூப்பிரண்டு முகமது ஹூசைன் செஹ்டோ , புனித ரமழான் மாதத்தை  முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர்…

Read More

நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!

இஸ்லாமியர்கள் நோன்பு இருக்க தயாராகிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக ரமலான் நோன்பு மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணிநேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். பொதுவாக பகல் நேரத்தில் உடலின் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு போதிய ஆற்றல் தேவைப்படும். ஆனால் ரமலான் நோன்பின் போது எந்த ஒரு உணவையும் சாப்பிடாமல் இருப்பதால், அவர்களின் உடலில் பகல் நேரத்தில் போதிய ஆற்றல் இல்லாமல் இருக்கும். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல்…

Read More

எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்து – இலங்கை மாணவன் சாதனை

மரணத்தை ஏற்படுத்தும் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் ரகித்த தில்ஷான் மாலேவன மாணவன் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிக்கூறிய ஜனாதிபதி அவர்கள்…

Read More

நீங்கள் சாம்சங் மொபைல் வச்சுருக்கீங்களா..?

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில் குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால் அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம். லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் சாம்சங்…

Read More

றிஷாத்  பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்  பதியூதீனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது. சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More

திருடப்பட்ட போனை கண்டுபிடித்த 18 வயது இளைஞர் சுட்டுக்கொலை

தனது திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த ஜெர்மி குக் என்ற 18 வயது இளைஞர், தன்னுடைய ஐ போனை வாடகை காரில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது போன் திருடப்படுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து தொலைந்து போன போனை கண்டுபிடிக்கும் டிராக்கிங் அப்ளிக்கேஷன் மூலம் போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு சென்று அங்கு…

Read More

கட்டாயத் திருமணப் பட்டியலில் இணைந்தது இலங்கை

பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களில் கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளின் முதல் 10 பட்டியலில் இலங்கை, ஆறாம் இடத்தை வகிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. குறித்த ஆய்வை மேற்கோள்காட்டி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை அடுத்து ஆறாம் இடத்தில் இலங்கை உள்ளதாகவும் காட்டாயத் திருமணமானது பிரித்தானியாவில் தண்டணைக்குரிய குற்றமெனவும் என்.டீ.டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாக்கிஸ்தான் 38.3 சதவீதத்துடன் முதலாமிடத்தையும் இந்தியா 7.8 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பங்களாதேஷ் 7.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3 சதவீதத்துடன் நான்காம்…

Read More