Headlines

சவூதி மன்னர் சல்மான் சூழுரை!

சவுதியில் ரமாளான் மாதம் ஆரம்பமாகி விட்டது இதனை தொடர்ந்து சவுதி மன்னர் சல்மான் தன்னை சந்தித்தவர்களிடையே உரையாற்றும் போது ரமாளானின் மாண்புகளை பற்றியும் அதில் நாம் பேண வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார் அவரின் உரையை அப்படியே தமிழில் தருகிறேன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் ரமளான் மாதம் குர்ஆன் இறக்க பட்ட மாதம் அந்த மாதத்தை அடையகுடியவர்கள் அந்த மாதத்தில் நோன்பு வைக்கவேண்டும் என்று திருமறையில் பிரகடனம்…

Read More

ராஜபக்ஸ கிராமத்தில் பேய்; சூனியக்காரரை வரவழைக்க திட்டம்

தம்புட்டுகம ராஜபக்ஷ கிராமத்தில் ஆண், பெண் மற்றும் 14 வயதுடைய பெண் ஆகியோர் வெள்ளை உடையில் உலாவி வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ராஜபக்ஷ கிராமத்தின் கிராம சேவகர் அசோகா தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில், கிராமத்தில் பல பேர், இதே போன்று வெள்ளை உடையில் மர்ம உருவங்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே கிராமத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சூனியக்காரர் ஒருவரை வரவழைக்க உள்ளோம். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50…

Read More

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தேசிய கொள்கை!

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்றிணைந்த தேசிய கொள்கை வகுக்கப்படுமென ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்தார். ஜெனீவாவில் ஐ.நா. சபையின் 29 ஆவது அமர்வு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குடியேற்றகாரர்களை, ஆட்கடத்தல் காரர்களினால் பாதிப்புக்குள்ளானவர்களாக கருதும் இலங்கை அனைத்து சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்…

Read More

பிடித்ததில் வலித்தது….

நண்பா இது ஒரு “கதையல்ல நிஜம்”…! என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து பேசினாங்க… “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் …? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , “போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”…? நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை…

Read More

தினமும் ஓதுவோம் திருமறையை!

தினமும் ஓதுவோம் திருமறையை! ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) மதனீ, வசனங்கள்: 129 (03-04) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால்…

Read More

மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வியில் இனவாதம்?

– றிஹாம் – மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நாடகப்போட்டி  இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில்  உயர் கல்வி அதிகாரி ஒருவரின் தலைமையில் நேற்று  நடைபெற்றது. குறித்த இப்போட்டி நிகழ்ச்சியில் 07 பாடசாலைகள் பங்கு பற்றின. அதில் இரண்டு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  நிகழ்ச்சிகள் அனைத்தும்  குறித்த பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றபோதும் அம்மண்டபத்தின் அனைத்து நுழைவாயில்கள், ஜன்னல்கள் குறித்த  கல்வி அதிகாரியினால்  மூடப்பட்டன.​ அத்தோடு மூடிய அறையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்சிக்கு…

Read More

பிரதமர் வேட்பாளராக மஹிந்தவுக்கு இடமில்லை: ஜனாதிபதி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சுசில் பிரேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன…

Read More

அவசரமாக கூடுகிறது ஐ.தே.க

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம் என்றும், வர முடியாதவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான காரணத்தை விளக்கி முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…

Read More

நாளை றமழான் நோன்பு  இலங்கையில் ஆரம்பம்

நேற்று, ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத் திலும் தென்படாததால் இன்று ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை (19) ரமழான் முதல் நோன்பை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட   உலமாக்கள் – கதீப்மார்கள், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள்…

Read More

அஸ்பாக் அகமட் ஹாபீஸானார்

– அஸ்ரப் ஏ சமத் – அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாக கொண்ட பட்டய பொறியியலாளர் இர்சாத் அகமட்டின் மகன் அஸ்பாக் அகமட்  தெஹிவளை செயினப் பள்ளிவாசலின் மத்ரசாவில் பகுதி நேர மாணவப்பிரிவில் 3 வருடத்திற்குள்  முழுக் குர்ஆன் மனனம் செய்துள்ளார்.  இம் மாணவன் தரம் 8 லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவருக்கான பாராட்டு விழா அன்மையில் தெஹிவளையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் அஷ;ஷேக் யூசுப் முப்தி சிறப்புரையாற்றினார்.

Read More

தரம் ஒன்றிற்கு விண்ணப்பங்களை ஜுலை 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும் – கல்வி அமைச்சு

அப்துல்லாஹ் 2016 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இவ்வாறான அனுமதியின்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்ப் பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன்…

Read More

அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். சம்பவத்தின் போது குறித்த விமானத்தில்…

Read More