Headlines

சீனாவில் முஸ்லிம்கள் ரமழான் நோன்பிருக்க தடை!

சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமழான் நோன்பிலிருந்து விலகி…

Read More

முதியோர் மற்றும் முடியாதோர் இனி இலகுவாக ஹஜ் ,உம்ரா!

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான காபா ஆலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் புனித உம்ரா பயணத்திற்காக செல்கிறார்கள். அவ்வாறு செல்லக்கூடிய மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உம்ரா செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் நான்கு சக்கர புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்த படியே புனித உம்ரா கடமையை நிறைவு செய்யலாம், புதிய வாகனத்தை மக்காவின் தலைமை…

Read More

இரண்டரை வயதுக் குழந்தை நீரில் மூழ்கி மரணம்

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை – பாவற்கொடிச்சேனையில் ஞாயிறு பிற்பகல் இரண்டு வயது குழந்தையொன்று வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஏறாவூர், ஐயங்கேணியை சேர்ந்த கிருஸ்ணகுமார் சமிற்றா (இரண்டரை வயது) எனும் பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது. ஏறாவூர் ஐயன்கேணியில் இருந்து உன்னிச்சை பாவற்கொடிச்சேனைக்கு உறவினர்களிடம் வந்திருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாய்க்காலுக்கு அருகில் உறவினர்களது வீடு இருந்ததாகவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அருகிலிருந்த வாய்க்காலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம்…

Read More

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம் – பிரதமர் உறுதி

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே தன்னை சந்தித்த சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடமே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த்…

Read More

சிங்கள வாக்குகளால் மட்டும் அரசமைக்க முடியாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார். நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனியாக முன்னணி…

Read More

கத்தாரில் இஸ்லாமியக் கருத்தரங்கு

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் பொய்யான சாயங்கள் கழுவப்பட்டுப் போகும். இந்த அடிப்படையில் ‘இஸ்லாத்தில் நடுநிலைக் கோட்பாடு’ என்ற தொணிப் பொருளில் கத்தாரில் உள்ள இலங்கை இஸ்லாமிய மையம் 22.23.24.25.26 ஆகிய தினங்களில் ஐந்து நாட்கள் தொடரான ஒரு கருத்தரங்கினை ‘துமாமா’ வில் உள்ள மஸ்ஜித் ஆயிஷாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு அஸர் தொழுகை…

Read More

ரமழான் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது! ஒபாமா பெருமிதம்!

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த முறை இப்தார் நிகழ்வுக்காக முஸ்லிம்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த அழைப்பின் மூலம் அமெரிக்க சமூகங்களின் பன்முகத் தன்மை மற்றும் தேசப்பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் தமது வழிபாட்டு சுதந்திரத்தை அனைவரும் மதித்து பகிர்ந்துகொண்டமையும் என்னுள் மீளவும் நினைவூட்டப்படுகிறது….

Read More

சவுதியில் பணிபுரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது: “சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு…

Read More

அனைத்து கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க ஒருபோதும் உடன்படமாட்டேன்!  பிரதமர் அறிவித்ததாக றிஷாத் பதியுதீன் தெரிவிப்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.. அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்றும் பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சிறிய மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடான சந்திப்பின்…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்மும் சர்வதேச மயப்படுத்தலின் அவசியமும்

ஏ.எச்.எம்.பூமுதீன் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இருள் சூழ்ந்த யுகம் இன்று 25வது ஆண்டு எனும் வெள்ளி விழாவை தொட்டு நிற்கின்றது. 1990ம் ஆண்டு ஐ.தே.க.வின் அரசாங்க காலத்தில் வெளியேற்றப்பட்ட இந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் இற்றை வரையான ஐ.தே.க.வின் மூன்றாவது தடவை ஆட்சிக் காலத்திலும் கூட அதே இருள் சூழ்ந்த துயரத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சிக் காலத்தில் வெளியேற்ப்பட்ட மக்களை அவர்களின் சொந்தக் காணியில் மீள்குடியேற்ற வேண்டிய தார்மீகக் கடமையை கொண்டிருந்த ஐதேக…

Read More

தினமொரு நபிமொழி – 2

ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். (முஸ்லிம், அஹ்மத்)  நபிமொழி

Read More

என்னமா! இப்படி பண்றீங்களே மா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே முன்னாள் போராளியொருவர்…

Read More