Headlines

விளையாட்டுத் துப்பாக்கி மேயர் கைது

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடுவந்து பின் அது விளையாட்டுத் துப்பாக்கி எனக் கூறியவர் இந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விசாரணை நடப்பதால் சிலருக்கு வயிற்றோட்டம் – ரணில்

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்றுள்ள பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலான நாடுகளிடம் பயிற்சி பெற்ற விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். நாட்டில் மீண்டும் ஊழல், மோசடிகள் இடம்பெறாத வகையில் விசேட விசாரணைப் பிரிவொன்றை இந்த வருடத்துக்குள் நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபா நாயகர் சந்திம…

Read More

நீதி கிடைக்கும்: ஹிருணிகா

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார். பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த ஹிருணிகா பிரேமசந்திர, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…

Read More

நான் குற்றமற்றவன்: துமிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த துமிந்த சில்வா எம்.பி, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘எனக்கு எதிராக சேறு பூசுவதால் நான் அஞ்சப்போவதில்லை….

Read More

இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் – ரணில்

நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று…

Read More

19ஆவது திருத்தச்சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர்  நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிராக வாக்களித்தவர் சரத்வீரசேகர எம்பியாக இருக்கலாம் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிபிட்டார். இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்…

Read More

(படங்கள் இணைப்பு) பற்றி எரிகிறது அமெரிக்காவின் பால்டிமோர் நகரம். கடைகள், நிறுவனங்கள் கொள்ளை

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் பால்டிமோர் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில்…

Read More

இலங்கைக்கு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் வந்திருப்பதால், கள்ளர் கூட்டம் அதிர்ந்து போயுள்ளது – ரணில்

நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. 19வது திருத்தச் சட்டமூலம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் தஇன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள…

Read More

நிலநடுக்கத்தால் காத்மாண்டு நகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளது: வல்லுனர்கள் தகவல்

நேபாளத்தை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இதுவரை 4300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட ஒலி அலைகள் மூலம் பெறப்பட்ட நிலஅதிர்வு தரவின்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: அதிர்ச்சி தகவல்

நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு: ஐ.நா.சபை தகவல்

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவை போதுமான…

Read More

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றவர், 3 நாட்களின் பின் விபத்தில் வபாத்

-அனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளார். ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஐ.எம்.எல். ஐஸ்வாடி வீதியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் (வயது – 28) எனும் இரண்டு வயது குழந்தையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணமடைந்தவர் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் கடந்த 23.04.2015ம் திகதி இலங்கையில் இருந்து சென்றுள்ள வேளையில் 26.04.2015ம் திகதி நல்லிறவு…

Read More