Headlines

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்க முடி­யாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச்…

Read More

தொழிற்சாலையை விட்டு தப்பி சென்ற அதிகாரிகள் : 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(K.Kapila) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மகளின் பெயரை மாற்ற தந்தைக்கு உத்தரவு

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி மகிழ்வர். ஆனால் சீனாவில் ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றுமாறு, அதன் தந்தைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பெயர் வைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும். அங்கு வசித்து வரும் லியூ என்பவர் தனக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெய்…

Read More

கிரேக்க நாட்டில் கலகக்காரர்களிடம் இருந்து மந்திரியை காத்த மனைவி

கிரேக்க நாட்டில் யானிஸ் வாரவ் பக்கிஸ், நிதி மந்திரி பதவி வகித்து வருகிறார். அவர் தனது மனைவி டேனி மற்றும் நண்பர்களுடன் அங்கு எக்சார்சியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அவர்கள் அனைவரும் இரவு விருந்தினை சாப்பிட்டு முடித்தனர். அப்போது அங்கு அதிரடியாக புகுந்த இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் கண்ணாடி பொருட்களை வீசி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிதி மந்திரி யானிஸ், காயம் அடைந்து விடாதபடிக்கு மனைவி டேனி,…

Read More

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள்! சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் மன்னர் சல்மான் அதிரடி!

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சவூதியின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்திற்குப் பின் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் (வயது 79), கடந்த ஜனவரி மாதம் முடிசூட்டப்பட்டார்.இவர் பதவியுடன் பட்டத்து இளவரசராக முக்ரின் பின் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முக்ரின் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பட்டத்து இளவரசராக வலிமை வாய்ந்த உள்துறை அமைச்சராக திகழ்ந்து வந்த முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

போட்டோ – வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்களே.., உஷார் !

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த ‘ஸெல்பி’ யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ‘மேடம் இந்த சுடிதார்லே நீங்க சிம்ரன் மாதிரி இருக்கீங்க, ஒரே ஒரு போட்டோ…

Read More

நேபாள நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 22 மணி நேரத்துக்கு பின்னர் அழுகுரல் கேட்டு காப்பாற்றப்பட்ட 4 மாத குழந்தை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் அடியில் சுமார் 4 மாத குழந்தை சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட நேபாள ராணுவத்தினர் அந்த குழந்தை பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து அருகாமையில் உயிருக்குப் போராடியபடி, வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்த மற்றவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ராணுவ வீரரின் காதுகளில் மட்டும் சிறு குழந்தையின் மெல்லிய அழுகுரல் சத்தம் லேசாக விழுந்தது. சத்தம் வந்த இடத்துக்கு விரைந்து சென்றபோது, சற்று நேரத்துக்கு முன்னர்…

Read More

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பஸ் மோதியதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காரின் டிரைவர் காயமடைந்தார். பஸ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த நிறுவனம் அந்த கார் டிரைவருக்கு 90 ஆயிரம் திர்ஹம்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என…

Read More

19ஐ தோற்கடிப்பதற்கு மஹிந்த ஆதரவுக்குழு இறுதிவரை செய்த சூழ்ச்சி

அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா நேற்றுத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டு மக்கள் பெரிதும் சந்தோஷப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் யாப்பு திருத்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றது….

Read More

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெட்ரோல் மற்றும் Wi-fi தன்சல்

வெசக் தினத்தன்று இலவச WiFi வசதிகள் கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும் என ICTA தெரிவிக்கின்றது. இவ்வாறு WiFi தன்சல் வழங்கப்படுவது இலங்கை வரலாற்றிலேயே முதற் தடவை ஆகும். கொழும்பில் லேக் ஹவுஸ் வெசக் பகுதியில் இலவச WiFi தொழிற்படுத்தப்படவுள்ள அதே வேளை மாத்தறையில் பொது நூல் நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில்  இலவச WiFi செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக டயலொக் மற்றும் லங்கா பெல் ஆகிய நிறுவனங்கள்…

Read More

ஒபாமா தொழுவதற்கு கற்று வருகிறார்.. சவுதி பத்திரிகையிடம் பாட்டி

அதிபர் பராக் ஒபாமாவின் தந்தைவழி தாத்தாவின் மூன்றாவது மனைவி, சாரா உமர், 90. இவர் கினியா நாட்டை சேர்ந்தவர். சாரா உமர், தன் மகனும், பராக் ஒபாமாவின் சித்தப்பாவுமான சையது ஒபாமா மற்றும் பேரன் மூசா ஒபாமாவுடன், சென்ற வாரம் மக்காவிற்கு உம்ரா செய்ய சென்றுள்ளார். பின்னர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும், ‘அல்வதன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பேரன், முஸ்லிம் மதக் கோட்பாடுகளை ஏற்பதற்காகவும் , தொழுவதற்கு  கற்று வருவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்…

Read More

எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் – ஞான­சாரர்

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாது­காக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும்,…

Read More