பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவைக்கு ஏழு மக்கள் பிரதிநிதிகளும் மூன்று சிவில் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்…
