நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் அந்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்தும் உண்ண உணவின்றியும் துன்பப்படுகின்றனர். இதன்படி நேபாள அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான பட்டியலொன்றை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை சிவில் அமைப்புகளோ அல்லது தனி நபரோ வழங்க விரும்பினால் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவேண்டுமாயின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை அணுகுமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதேவேளை உலர்…
