இனவாத சக்திகளின் செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன
இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டுக்குள் கொழுந்து விட ஆரம்பித்துள்ளன. இனவாதத்திற்கும் இனவாதிகளுக்கும் இடமளித்தால் பாரிய பிளவுகளுக்கே வழிவகுக்கும். இப்படியானதொரு தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் தொடர்பி லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உட்பட அரசியல் அந்தஸ்தை இழந்து நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தத் துடிக்கும் சக்திகளுக்கு இனி ஒரு போதும் இடமளிக்க கூடாது. அவ்வாறு…
