Headlines

ஜப்பான் வான்வெளியில் வேற்று கிரகவாசிகள் நடமாட்டம்?: பாராளுமன்றத்தில் விவாதம்

ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. குறுக்கிட்டு நமது நாட்டின் வான் எல்லையில் வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவது அச்சமாக உள்ளது. பச்சை நிற வேற்று கிரக வாசிகள் ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேட்டனர். அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவிதமான ஒரு பொருள் நமது நாட்டு…

Read More

ரணில் விக்ரமசிங்க அம்பாறை விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார். இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை…

Read More

மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்!

யேமனில் இடம்பெறும் மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மூவர் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய படகினால் குறித்த இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் ஐவரை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உருவாகிறது அரபு லீக்கின் புதிய இராணுவம்

அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும் முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த…

Read More

அமைச்சர் றிஷாத்தின் வேண்டுகோளுக்கமைய – வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் பிரதான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் ஒரு மாதகாலத்துக்குள் அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன காணி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நேற்று (2015-04-02) ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை வழங்கினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியிடம்விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த கூட்டம்…

Read More

சவூதியை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை: பாகிஸ்தான்

சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் எச்சரித்தது.யேமனில் ஷியா பிரிவு ஹூதி பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் சவூதியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், யேமனில் ஹூதி பயங்கரவாத நிலைகள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். யேமன் நிலவரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தலைமையிலான குழு சவூதிக்குச் செவ்வாய்க்கிழமை சென்றது.யேமன் நிலவரம் தொடர்பாக…

Read More

2070-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் முதலிடம்

2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.இதுதொடர்பாக, அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.அடுத்த 40 ஆண்டுகளுக்கு, உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள். அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களின் வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் அதிகமானதாக இருக்கலாம்.இந்த நிலை…

Read More

நல்லதை செய்தால் விமர்சனங்கள் எம்மை தேடி வரும் சவால்கள் பிரதியமைச்சா் அமீா் அலி

எம்.ரீ.எம்.பாரிஸ் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எமது பிரதேசத்திற்கு நல்லது செய்யவேண்டுமென்ற நோக்கோடு யாரெல்லாம் செயற்படுகின்றார்களே அவா்களுக்கு எனது பூரண ஒத்துழைப்புக்களையயும்,உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என சமுா்த்தி விடமைப்பு பிரதியமைச்சா் அமீா் அலி அவா்கள் அண்மையில் அல்-கிம்மா நிறுவனத்தினால் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தின் ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில் கல்குடா அல்-கிம்மா என்ற தன்னார்வ நிறுவனம் எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது இலங்கையின் பல…

Read More

மலையக தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நியாயம் வேண்டி ACMC பிரதிநிதிகள் களத்தில்

இக்பால் அலி கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையக பிரேதேச தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக மூவாயிரத்து இருபத்தி நான்கு ஆசிரிய வெற்றிடங்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 2014/04/20ந் திகதிக்கு முன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வரும் இவ்வேளையில் மலையக முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் யூ சி எம் சி உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் கவனத்திற்கு…

Read More

தேசிய நிறைவேற்று சபை கூடியது

தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தேசிய நிறைவேற்று சபை, இரண்டு வாரங்களுக்கு பின்னரே கூடியிருக்கின்றது. இந்த தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) அறிவித்திருந்த நிலையிலேயே நிறைவேற்று சபை கூடியுள்ளது.

Read More

தலைக்கவச விவகாரம்: சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் (ஹெல்மெட்) பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையிலேயே இந்த இடைக்கால தடையுத்தரவு, இன்று வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவர் தாக்கல் செய்த மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை, வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர அங்கீகாரம்

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேற்று இது தொடர்பிலான யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த உத்தேச சட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இன மற்றும் மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…

Read More