Headlines

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனைக்கு உயிர் கொடுத்த முதியவரின் பேரன்பு – வீடியோ இணைப்பு

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத அற்புதம். 2010-ம் ஆண்டு தனது பென்சன் பணத்தை வாங்கச் செல்வதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்த ஆப்டோ, ஒரு பூனை பசியில் கத்தும் சத்தத்தைக் கேட்டார். ஆனால் கண்ணுக்குத் தெரிந்து அங்கு ஒரு பூனையும் இல்லாததைக்…

Read More

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி: இருவர் காயம்

புத்தளம் – புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

“அபி பைஹினவா” ஜனாதிபதி கூறிய இரண்டு வார்த்தைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கம் தொடர்பில் இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார். “அபி பைஹினவா”   என்ற இரண்டு வார்த்தைகளையே ஜனாதிபதி கூறியுள்ளார். “நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    ஆனால் “”நாங்கள் இறங்குவோம்””  என்று கூறுவதற்கும் இவ்வாறு அப்பி பைஹினவா”    என்று சிங்கள  மொழியில் கூறப்படுவதுண்டு. கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஊழல்கள்…

Read More

புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைக்கின்றது: ரவி கருணாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைப்பதாகவும், அந்த நிதியை ஊழலற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த ரவி கருணாநாயக்க, வீதி ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றால் அதற்கு 100 இலட்சம் செலவிடுவது அபிவிருத்தியல்ல எனவும் ஊழலைக்…

Read More

ஜோன் கெரி ஜூனில் இலங்கை வருகிறார்!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரும் ஜூன் மாதம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அத்தோடு, புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

நாளை முதல் 10ம் திகதி வரை கொழும்பில் வீதி ஒழுங்குகள் கடுமையாக அமுல்!

கொழும்பின் பல பிரதேசங்களில் இந்த ஒழுங்குகள் அமுல்செய்யப்படவுள்ளன. இதன் மூலம் கொழும்பின் வீதி வாகன நெரிசல் நிலையை குறைக்கமுடியும் என்று பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த திட்டத்தின்படி வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகோடுகளில் முறையற்ற விதத்தில் குறுக்கிட்டு வாகனங்களை செலுத்துதல் தடுக்கப்படும். இவ்வாறானவர்களுக்கு சட்டரீதியாக தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும். மொரட்டுவை முதல் காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி முதல் பம்பலப்பிட்டியின் டுப்ளிகேசன் வீதி, பொரளை, சேனாநாயக்க சந்தி முதல் பொல்துவ சந்தியின் ஸ்ரீஜெயவர்த்தனபுர வீதி, பேலியகொட முதல் கிரிபத்கொட கண்டிவீதி மற்றும்…

Read More

100 வயதில் 1500 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜப்பான் பாட்டி

ஜப்பானில் உள்ள மட்சுயாமா நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி, பெண்கள் ப்ரீ ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் 100 வயதான மீக்கோ நகோகா உலக சாதனை படைத்தார். 100 முதல் 104 வயதுக்குரியவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் போட்டியில் இவர் மட்டுமே கலந்து கொண்டபோதிலும், 1500 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம், 15 நிமிடம் மற்றும் 54 விநாடிகளில் பின்புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளதாக ஜப்பான் மாஸ்டர்ஸ் நீச்சல் சங்கம்…

Read More

பொது தேர்தலின் பின்னர் ஐ.தே.க. நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்: பிரதமர் ரணில்

பி. முஹாஜிரீன் ‘எதிர் வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகவின் அழைப்பின் பெயரில் (05) ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதம ரணில் விக்ரமசிங்க அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வை அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…

Read More

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரி, முஸ்லிம் அமைச்சர்களும் இணைவு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (05) பிற்பகல் 1.30 இற்கு  யூ எல் 183 பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Read More

யோசித்தவின் பயிற்சிக்கு 210 இலட்சம் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த…

Read More

காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரல்

எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்களும் கோரப்படுகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அங்கத்தவர்களாக சேர விரும்புபவர்களும் விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 19.04.2015 ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாவோ ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி எம்.எச்.எம்.அன்வர் (உப செயலாளர்) 16 ஹிஜ்றா…

Read More

பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று அன்மையில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மஃஹதுஸ்ஸுன்னா மகளீர் அரபிக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவியா சில்மியா தாரிக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்

Read More